|
26 |
| நாற்றிறத் தொழிலரை நால்வேறு பாலென்று | | நற்றமிழரை யெல்லாம் நான்காவதாம் | | சூத்திரனென் றாரியன் சொலத்தன் னைச்சற் | | சூத்திர னென்றனன் வேளாளன். |
|
7 |
| வெண்ணிற மாய்வந்த வேற்றவர் மொழியுடன் | | விண்ணவர் வழியென்று வீழ்ந்து கெட்டான் | | கண்ணிய மாகமுன் கருதிய தமிழனே | | கண்ணான தமிழைப் புண்ணாக்கி விட்டான். |
|
53. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை |
|
படிக்காசுப் புலவர் புலம்பல் |
| 'மீளாத நரகினுக் காளாக்கும் குடியே' என்ற மெட்டு வகை |
|
ப. |
| பாழானதே என் வாழ்வு பண்ணாருந் தமிழே | | ஏழாங் கடையிலும் என் எண்ணம் நீர்க் குமிழே |
|
து. ப. |
| தாழாத பணியெனும் தாளாண்மை யுழவே | | வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே (பாழா) |
|
உ.1 |
| செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச் | | சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோமில்லை | | தப்பிய மகளிராய்ப் பிறந்தோமில்லை - செல்வத் | | தையலார் குற்றேவலும் செய்தோமில்லை (பாழா) |
|
2 |
| மூவேந்த ரொடுவேளிர் முதுகுமணன் - கொடை | | முதிர்ந்த நல்லியக் கோடன் முனம் மறைந்தார் | | ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் - பின்னே | | இலவம் பஞ்சேதமிழ்ப் புலவ ரெல்லாம் (பாழா) |
|