|
3 |
| பிள்ளைப் பாண்டியனொடு வில்லியில்லை - பிழை | | பேணாத சாத்தனொடு கூத்தனில்லை | | கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று | | காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை (பாழா) |
|
54. பாண்டி நாட்டின் பண்பிழப்பு |
|
'மாது சிரோன்மணியே' என்ற மெட்டு |
பண் - (நாதநாமக் கிரியை) தாளம் - முன்னை |
1 |
| பைந்தமிழ்ப் பாண்டியமே - உன்னைப் | | பன்முறை வேண்டியுமே | | ஐந்தாம்படை நேயமே - கொண்டாய் | | அருந்தமிழும் தேயுமே. |
|
2 |
| இந்தி யெதிர்ப்பவரே - இங்கே | | இந்நாளுமே யெவரே | | அந்தமிழ்க் கானவரே - என்னும் | | ஆசான்மார் வாணிகரே. |
|
3 |
| மாணவர்க்கோ முனமே - இங்கே | | மாயும் தமிழ்மனமே | | ஊணிற் கலந்த தெனுமே - தமிழ் | | ஊட்டாது தாயினமே. |
|