பக்கம் எண் :

48இசைத்தமிழ்க் கலம்பகம்

3
பிள்ளைப் பாண்டியனொடு வில்லியில்லை - பிழை
     பேணாத சாத்தனொடு கூத்தனில்லை
கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று
     காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை
(பாழா)
54. பாண்டி நாட்டின் பண்பிழப்பு
'மாது சிரோன்மணியே' என்ற மெட்டு
பண் - (நாதநாமக் கிரியை)
தாளம் - முன்னை
1
பைந்தமிழ்ப் பாண்டியமே - உன்னைப்
     பன்முறை வேண்டியுமே
ஐந்தாம்படை நேயமே - கொண்டாய்
     அருந்தமிழும் தேயுமே.
2
இந்தி யெதிர்ப்பவரே - இங்கே
     இந்நாளுமே யெவரே
அந்தமிழ்க் கானவரே - என்னும்
     ஆசான்மார் வாணிகரே.
3
மாணவர்க்கோ முனமே - இங்கே
     மாயும் தமிழ்மனமே
ஊணிற் கலந்த தெனுமே - தமிழ்
     ஊட்டாது தாயினமே.