பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்49

55. அயன்மொழியால் தமிழ் கெடுதல்
'கொடியசைந்ததும் காற்று வந்ததா' என்ற மெட்டு
1
நோயிருக் கையில் வியாதி வந்தது
      வியாதி வந்தபின் சீக்கு வந்தது
சீக்கி ருக்கவே பீமார் வந்திடும்
      பீமார் வந்திட ஏமாறாதீர்கள்.
2
இப்படி யெல்லாச் சொல்லும் மாறினால்
      எப்படித் தமிழ் இருக்கும் பின்னரே
தப்பாய் இந்தியால் தமிழ் கெடாதென்பார்
      எப்போதும் தாம்மேல் இருக்க எண்ணுவார்.
56. தமிழ் ஏத்து
'கசமுக வதனா' என்ற மெட்டு
ப.
எழுங்கதிர் எனவே இணையில் தமிழும்
இருளெலாம் ஒழிய எல்லே உமிழும்
(எழுங்)
உ. 1
வழுதியர் கடைசெய் வழுவினால் நீடு
வடமொழிக் கடலுளே மறைந்து பிற்பாடு
(எழுங்)
2
இமைகலை நிறையும் எழில்மதி யுறையும்
இலகுறு மறைமலை யிடையொரு முறையும்
(எழுங்)
3
உண்மையே மாற்றும் ஒன்னலர் விழவே
உலக முழுதுமுணர் உயர்ந்தவர் தொழவே
(எழுங்)
குறிப்பு : "இமைகலை... மறைமலை" என்பது இரட்டுறல்.