|
55. அயன்மொழியால் தமிழ் கெடுதல் |
|
'கொடியசைந்ததும் காற்று வந்ததா' என்ற மெட்டு |
1 |
| நோயிருக் கையில் வியாதி வந்தது | | வியாதி வந்தபின் சீக்கு வந்தது | | சீக்கி ருக்கவே பீமார் வந்திடும் | | பீமார் வந்திட ஏமாறாதீர்கள். |
|
2 |
| இப்படி யெல்லாச் சொல்லும் மாறினால் | | எப்படித் தமிழ் இருக்கும் பின்னரே | | தப்பாய் இந்தியால் தமிழ் கெடாதென்பார் | | எப்போதும் தாம்மேல் இருக்க எண்ணுவார். |
|
56. தமிழ் ஏத்து |
|
'கசமுக வதனா' என்ற மெட்டு |
ப. |
| எழுங்கதிர் எனவே இணையில் தமிழும் | | இருளெலாம் ஒழிய எல்லே உமிழும் (எழுங்) |
|
உ. 1 |
| வழுதியர் கடைசெய் வழுவினால் நீடு | | வடமொழிக் கடலுளே மறைந்து பிற்பாடு (எழுங்) |
|
2 |
| இமைகலை நிறையும் எழில்மதி யுறையும் | | இலகுறு மறைமலை யிடையொரு முறையும் (எழுங்) |
|
3 |
| உண்மையே மாற்றும் ஒன்னலர் விழவே | | உலக முழுதுமுணர் உயர்ந்தவர் தொழவே (எழுங்) |
|
குறிப்பு : "இமைகலை... மறைமலை" என்பது இரட்டுறல். |