|
4 |
| பிறமொழிப்பேர் கொண்டாரின் பெயர்பெறின் தமிழ்குன்ற | | இறுதிவரை யிடங்கள் ஏந்தியே நிற்குமன்றோ (தமிழிலே) |
|
5 |
| அச்சமோ நாண்மடமோ அடிமைபுன் னம்பிக்கையோ | | எச்சமாறன் பின்மையோ எழில்தமிழ்ப்பேர் தாங்காமை (தமிழிலே) |
|
6 |
| சமயமொழி பேர்என்னச் சாரவொன் றில்லை | | அமையும் இறைவன் ஒன்றே அனைத்துல கெல்லை (தமிழிலே) |
|
79. தாய்மொழிப் பற்று |
|
'ராம பசன கோரிய' என்ற மெட்டு |
ப. |
| தாய்மொழிப் பற்றெங்ஙன் போகும் - தமிழன் ஆகம் |
|
உ.1 |
| சேய்நிலையி லிருந்து சிறந்த தாய்மொழி கொண்டு | | சீருடன் வாழ நேருமே சிறியோருமே (தாய்) |
|
2 |
| பெற்றதா யிருக்கவும் பிறத்தியைத் தாயென்பதோ | | பெற்றதாய் மொழியும் அதே உன்னுவீர் இதே (தாய்) |
|
3 |
| தமிழ்ஒன்றே உலகினில் தனிநிலைச் செம்மொழியாம் | | தள்ளுதற் கெதுங் குறையே அதில் மொழியே (தாய்) |
|
4 |
| மென்மொழி இன்பமாக மிழற்றும் தமிழமுதே | | மெலிந்தநோய் முதுநிலையும் மேவும் எளிதே (தாய்) |
|
5 |
| அறிவு வளர்வதற்கே அடிப்படைதாய் மொழியே | | அதையேனும் உணர்ந்தறி வாய்அன்பு வழியே |
|