|
81. தனித்தமிழிற்பேசாத தமிழாசிரியனின் தகுதியின்மை |
|
பண் - (கானடா) தாளம் - முன்னை |
1 |
| தமிழாசிரிய னென்று தானே அமர்ந்துகொண்டு | | தமிழிற் பேசாதவன் தமிழாசிரியனோ | | தமிழா சிறியவனே. |
|
2 |
| தமிழ்ப்புல வோனென்று தான்பெயர் தாங்கிக்கொண்டு | | தமிழிற் பேசாதவன் தமிழ்ப் புலவோனோ | | தமிழைப் புலந்தவனே. |
|
3 |
| தமிழில்வல் லானென்று தான்றனைச் சொல்லிக்கொண்டு | | தமிழ்ப் பேசாதவன் தமிழில் வல்லானோ | | தமிழிற வல்லாதவன். |
|
82. செந்தமிழ்ச் செம்மை |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| உள்ளக் கருத்தை யெல்லாம் தெள்ளத் தெளிவாய் என்றும் | | சொல்லற் குரிய தன்றோ மொழியாகும் | | தள்ளத் தகுந்த தில்லை கொள்ளச்சொல் எல்லா மென்னும் | | பிள்ளைத் தனமும் நல்ல வழியாமோ. |
|
2 |
| உண்பது பசிதீர உணவையுட் கொள்ளுவதே | | ஒழுங்கு வேண்டிய தில்லை என்பாரோ | | நன்கு பல்லைத் துலக்கி நன்னீரிற் குளித்தபின் | | நாகரிக மாயிருந் துண்பாரே. |
|