பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்75

2
பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப்
       பெருநாவ லன்சொன்னான் தமிழா
மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை
       மதியறி வொழுக்கத்தால் தமிழா.
3
இந்தியா வின்குலம் தமிழா - ஏதும்
       ஏனைநாட் டில்இல்லை தமிழா
வந்தவர் வாழவே தமிழா - நன்மை
       வகுத்த வகை யிது தமிழா.
4
இறகற்ற பறவைபோல் தமிழா - வினை
       இயற்றாத இடக்கைபோல் தமிழா
திறமையில் லாவாறு தமிழா - கல்வி
       தீர்ந்தனை நெடுங்காலம் தமிழா.
5
ஆரிய வேடரால் தமிழா - உன்றன்
        அரசப் பிறப்பற்றாய் தமிழா
சீரிய மறைமலை தமிழா - நீயும்
       சீருறும் வழிசொன்னான் தமிழா.
85. பகுத்தறிவைப் பயன்படுத்தல்
பண் - (பியாகு)
தாளம் - முன்னை
ப.
பகுத்தறிவை நீ பயன்படுத்து
பாரிலே பெரிய ஏ மாறியாம் தமிழனே
(பகுத்)
உ.1
வகுத்த மூவாயிரம் வழங்குமொழி களுள்ளே
    வளம்பெறு தமிழ்முதல் தாய்மொழியே
உகுத்தபல் சொற்களால் உண்டான செயற்கையாம்
     உயிரற்ற வடமொழி உயர்வழியோ
(பகுத்)