|
2 |
| பெற்ற தந்தையுடனே பிள்ளைகள் பேசுதற்குப் | | பிறிதொரு மொழிஞனைப் பெறவேண்டுமோ | | முற்றும் விளங்காமொழி முணுமுணுக் கும்பிறனே | | மூலத் தந்தையைத்தொழ வரவேண்டுமோ (பகுத்) |
|
3 |
| விடுதலைப் போராட்டம் வேற்றவ ராட்சியை | | விலக்கி நல்வாழ்வையே விளைப்பதற்கோ | | வடதலை நாட்டினர் வறிய இந்தி புகுத்தி | | வண்டமிழ் மொழியையே ஒழிப்பதற்கோ (பகுத்) |
|
4 |
| தன்னகத் தண்ணீரூற்றித் தன்பழ மட்கலத்தில் | | தயிரைத் தருபவளும் தமிழப் பெண்ணே | | மன்னரும் மாசெல்வரும் மரக்கறி வேளாளரும் | | மடைதரின் ஒருசிலர் மறுத்தற் கண்ணே (பகுத்) |
|
5 |
| ஆயிரந் தலைமுறை ஆனபின்னரும் முன்னோர் | | ஆற்றிய தொழின்முறை அடைகுலமோ | | மாயிருந் தமிழினம் மலையும்பல் பிரிவுண்டு | | மடியவே பகைசெய்த வகைவலமோ (பகுத்) |
|
86. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை |
|
'ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே' என்ற மெட்டு |
ப. |
| தமிழனே உலகில் தாய்மொழி பேணாதவன் |
|
து. ப. |
| இமிழ்கடல் சூழுலகில் இதுவும் ஓர் இறும்பூதே (தமிழனே) |
|
அ.1 |
| ஏனைய உயர்நிலை இலக்கியச் செம்மொழிகள் | | இறந்த பின்னரும் தமிழ்இளமை குன்றா வழியும் (தமிழனே) |
|