|
2 |
| ஞாலமிதி லெழுந்த நாயக மொழிகளின் | | மூலமாகத் திகழும் முதுமொழி தமிழேனும் (தமிழனே) |
|
3 |
| அறுக்கிற வனைநம்பும் ஆடதுபோல் தமிழை | | வெறுக்கிற வனைநம்பி வேற்றுமொழி விரும்பும் (தமிழனே) |
|
4 |
| பொருவரு நூல்களுடன் பொருளிலக்கணங் கொண்டு | | முருகனும் மாலும்தோன்றும் முத்தமிழ்நிலை கண்டும் (தமிழனே) |
|
5 |
| எத்தனை சான்றுரைகள் எடுத்துரைத்தும் நம்பாது | | பித்தனைப் போலேநின்று பேணிமனங் கொளாத (தமிழனே) |
|
87. பாண்டி நாட்டில் தமிழுணர்ச்சி யின்மை |
|
'மலையே உன் நிலையே நீ பாராய்' என்ற மெட்டு |
ப. |
| செந்தமிழ்ப் பாண்டிய நாடே | | சிறிதுந்தென் பண்பாடு சேராது சீர்கேடே (செந்) |
|
உ. |
| முந்தே விளங்கிய முத்தமிழ் மன்றானே | | செந்தீ வண்ணன்அங்கே சேர்ந்தேஇன் புற்றானே | | இந்தநிலை ஆரியம் வருமுன் தானே | | இன்றோ உணர்ச்சி என்னும் இல்லையே. |
|
(உரைப்பாட்டு) |
| பாரில் மொழி தோன்றியது தொட்டுப் பாண்டியன் வளர்த்த தமிழ் | | பாங்காய் வளர்வதின்று கொங்கு நாடே | | சேர சோழ பாண்டியர் என்று சேருந் தொடர்ச் சொன்முறையும் | | சீராகக் காட்டு மிந்த முரண்பாடே |
|