பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்77

2
ஞாலமிதி லெழுந்த நாயக மொழிகளின்
மூலமாகத் திகழும் முதுமொழி தமிழேனும்
(தமிழனே)
3
அறுக்கிற வனைநம்பும் ஆடதுபோல் தமிழை
வெறுக்கிற வனைநம்பி வேற்றுமொழி விரும்பும்
(தமிழனே)
4
பொருவரு நூல்களுடன் பொருளிலக்கணங் கொண்டு
முருகனும் மாலும்தோன்றும் முத்தமிழ்நிலை கண்டும்
(தமிழனே)
5
எத்தனை சான்றுரைகள் எடுத்துரைத்தும் நம்பாது
பித்தனைப் போலேநின்று பேணிமனங் கொளாத
(தமிழனே)
87. பாண்டி நாட்டில் தமிழுணர்ச்சி யின்மை
'மலையே உன் நிலையே நீ பாராய்' என்ற மெட்டு
ப.
செந்தமிழ்ப் பாண்டிய நாடே
சிறிதுந்தென் பண்பாடு சேராது சீர்கேடே
(செந்)
உ.
முந்தே விளங்கிய முத்தமிழ் மன்றானே
செந்தீ வண்ணன்அங்கே சேர்ந்தேஇன் புற்றானே
இந்தநிலை ஆரியம் வருமுன் தானே
இன்றோ உணர்ச்சி என்னும் இல்லையே.
(உரைப்பாட்டு)
பாரில் மொழி தோன்றியது தொட்டுப் பாண்டியன் வளர்த்த தமிழ்
     பாங்காய் வளர்வதின்று கொங்கு நாடே
சேர சோழ பாண்டியர் என்று சேருந் தொடர்ச் சொன்முறையும்
    சீராகக் காட்டு மிந்த முரண்பாடே