பக்கம் எண் :

84இசைத்தமிழ்க் கலம்பகம்

ஒளவையார் விடை
நூலென்றாலோ கோல்சாயும்
     நுந்தமரென்றால் வெஞ்சமராம்
கோலென்றாலோ குடிசாயும்!
     கொள்ளும் அமைச்சன் வேளாளன்.
94. தமிழனுக்குத் தகுதியுண்மை
'கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு
ப.
தகுதியில் தாழ்ந்தவனோ - தமிழன்
தானாக வீழ்ந்தவனோ.
உ.1
இகமிதில் ஏனையர் மோதும்
     இருளில் கிடந்துழல் போதும்
தகும்பல் கலையிறும் பூதும்
     தமிழன் கண்டான் ஓதும் ஓதும்
(தகுதி)
2
வலங்கை யிடங்கை ஒன்று
     வழங்கா மல்இடம் பின்று
குலமுறை யாற்கலை யின்று
     குறைந்தான் தமிழன் இன்று இன்று
(தகுதி)
3
இன்றும் பல்துறைக் கலையே
     இருந்தான் தமிழன் தலையே
நன்றே திருந்தின் நிலையே
     நண்ணும் மேலையர் துலையேதுலையே
(தகுதி)