|
95. தமிழன் தாழ்வுணர்ச்சி |
|
'காக்காய்க் கண்ணுக்கு' என்ற மெட்டு |
1 |
| சூத்திரன் என்று சொல்லாதே | | சொல்பவ ரோடே ஒல்லாதே | | மாத்திறந் தன்னைக் கொல்லாதே | | மடமைத் தாழ்வு பொல்லாதே. |
|
2 |
| நாற்பால் என்பது நாற்றொழிலே | | நடத்துந் தொழிலே நங்குலமாம் | | ஏற்கா வகையிற் பிறப்போடே | | இணைத்தார் ஆரியர் இழுக்காக. |
|
3 |
| யானை கட்ட வன்றொடரி | | தானே எடுத்துத் தருதல்போல் | | மானங் கெட்ட தமிழன்தான் | | தானே தன்னைத் தாழ்த்திக்கொண்டான். |
|
96. தமிழன் குலம் |
|
பண் - சிந்து பைரவி தாளம் - முன்னை |
ப. |
| நானொரு தமிழன் நான்வந்த வழியே | | தேனினு மினிய செந்தமிழ் மொழியே. |
|
து. ப. |
| நானிலம் முழுதும் நல்லக விழியே | | நண்ணமுன் எழுந்தது நறுந்தமிழ் ஒளியே (நானொரு) |
|