பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்85

95. தமிழன் தாழ்வுணர்ச்சி
'காக்காய்க் கண்ணுக்கு' என்ற மெட்டு
1
சூத்திரன் என்று சொல்லாதே
      சொல்பவ ரோடே ஒல்லாதே
மாத்திறந் தன்னைக் கொல்லாதே
      மடமைத் தாழ்வு பொல்லாதே.
2
நாற்பால் என்பது நாற்றொழிலே
       நடத்துந் தொழிலே நங்குலமாம்
ஏற்கா வகையிற் பிறப்போடே
       இணைத்தார் ஆரியர் இழுக்காக.
3
யானை கட்ட வன்றொடரி
       தானே எடுத்துத் தருதல்போல்
மானங் கெட்ட தமிழன்தான்
      தானே தன்னைத் தாழ்த்திக்கொண்டான்.
96. தமிழன் குலம்
பண் - சிந்து பைரவி
தாளம் - முன்னை
ப.
நானொரு தமிழன் நான்வந்த வழியே
தேனினு மினிய செந்தமிழ் மொழியே.
து. ப.
நானிலம் முழுதும் நல்லக விழியே
நண்ணமுன் எழுந்தது நறுந்தமிழ் ஒளியே
(நானொரு)