பக்கம் எண் :

86இசைத்தமிழ்க் கலம்பகம்

உ.1
வானவர் மொழியென வரும்வட மொழியே
    வாய்ந்தது தமிழினால் வலந்திரிந் துழியே
ஏனுயர் தமிழனும் இழிவுறும் பழியே
     எய்தினன் இனியேனும் ஏமாறல் ஒழியே
(நானொரு)
2
முந்தியே பெறுவது மொழிதரும் பேரே
     முன்கையே தோளினும் முன்னுறும் பாரே
இந்தியன் எனும்பெயர் இரண்டாவ தோரே
     இதன்பின்னே ஆசியன் என்பது நேரே
(நானொரு)
3
பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன்
     பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன்
ஊரெலாம் சொந்தமாய் உள்ளினான் தமிழன்
    ஒருவனே தேவன்என் றுணர்ந்தவன் தமிழன்
(நானொரு)
97. ஆங்கில ஆரியப் பண்பாடு வேற்றுமை
'ஆரியோகே ஓய்' என்ற மெட்டு
1
தாழ்ந்தவன் உயர்ந்ததே ஆங்கி லத்தினால் - அவன்
     தலைவருக் குணவிட்டான் தங்கமே தங்கம்
உயர்ந்தவன் தாழ்ந்ததோ ஆரி யத்தினால் - அவன்
     உணவமைத்தல் இழந்தான் தங்கமே தங்கம்.
2
உடலைப் பிணித்ததுவே ஆங்கில வாட்சி - அதும்
     ஒழிந்துபோய் விட்டதுகாண் தங்கமே தங்கம்
உளத்தைப் பிணித்ததுகீழ் ஆரிய வாட்சி - அது
     உள்ளரித்துக் கொண்டிருக்கும் தங்கமே தங்கம்.
3
நடுநிலைத் தண்டனைதான் ஆங்கிலத் தீர்ப்பு - அது
     நாயனாரின் தமிழ்முறை தங்கமே தங்கம்
குடிநிலைத் தண்டனைகீழ் ஆரியத் தீர்ப்பு - அது
     கொடிய மனுமுறையே தங்கமே தங்கம்.