பக்கம் எண் :

98இசைத்தமிழ்க் கலம்பகம்

109. தமிழ் கடன்கொண்டு வளராது
சித்தார்வண்ணம்
பண் - பீன் பலாசு
தாளம் - முன்னை
ப.
கடன் வாங்குவதால் தமிழ் வளருமென்றே - பலர்
வலிந்துரைப்பார் மொழிவகை யறியார்.
து. ப.
கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே - பல
வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால் - தமிழ்
வளமிகக் குன்றி வருகின்றதே
(கடன்)
உ.
ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால் - கடன்
வாங்கியே செய்தல் வகையாகும்
கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின் - அவன்
வண்பொருள் குன்றி வருவதுடன் - கடன்
வாங்கியென் றிழிவும் வந்துவிடும்.
(கடன்)
110. ஏமாற்றுந் தமிழ்க்காவலர்
'சிங்கார வேலனே வா' என்ற மெட்டு
ப.
இந்த நாளிற் பல பேரே - இங்கே
இன்றமிழ்ப் பேராலே ஏமாற்று வோரே.
து. ப.
சொந்த நலத்தை முன்தூக்கிச் செய்வாரே
சும்மா செய்யார் தமிழ்க் கிம்மியும் பாரே.
(இந்த)
உ.1
அந்தமிழ்க் காவலர் என்பார் - அவர்
அறியும் தமிழ்ப்பேரைச் சிறிதும் விரும்பார்