பக்கம் எண் :

14இசைத்தமிழ்க் கலம்பகம்

15. செந்தமிழ்ச் சிறப்பு
'மண்டலத்தில் இதுவரை கண்டதில்லை' என்ற மெட்டு
1
இந்த வுலகத்தினிலே எந்தமொழி கற்றிடினும்
செந்தமிழெனெச் சிறந்ததில்லை
இது - முந்து தென்னிலத்திருந்த எல்லை
வழி - மோனை யெதுகையமை
தேனை நிகரினிமைப்
பாவே நூலும்
நாவு மேலும்.
2
இன்னிசையுடன் நடனம் பன்னிலம் இருந்திடினும்
இந்நிலமே மொழியொடு தோதும்
நன்று - கண்ணியே முத்தமிழ் என ஓதும்
தமிழ் - பொருளிலக்கண மொழி
அருளிலக்கிய வழி
உண்மை தேறும்
நன்மை கூறும்.
3
மண்ணுலகில் உயிரினம் எண்ணரிய பகுத்தறி
வொண்ணிய மாந்தனே உயர்திணையே
மிசை - விண்ணுலக வேந்துமில்லை இணையே
தமிழ் - உலகவழக்கும் இதை
இலக விளக்கி விடும்
குமரி நிலமே
எமரின் புலமே.