|
15. செந்தமிழ்ச் சிறப்பு |
|
'மண்டலத்தில் இதுவரை கண்டதில்லை' என்ற மெட்டு |
1 |
| இந்த வுலகத்தினிலே எந்தமொழி கற்றிடினும் | | செந்தமிழெனெச் சிறந்ததில்லை | | இது - முந்து தென்னிலத்திருந்த எல்லை | | வழி - மோனை யெதுகையமை | | தேனை நிகரினிமைப் | | பாவே நூலும் | | நாவு மேலும். |
|
2 |
| இன்னிசையுடன் நடனம் பன்னிலம் இருந்திடினும் | | இந்நிலமே மொழியொடு தோதும் | | நன்று - கண்ணியே முத்தமிழ் என ஓதும் | | தமிழ் - பொருளிலக்கண மொழி | | அருளிலக்கிய வழி | | உண்மை தேறும் | | நன்மை கூறும். |
|
3 |
| மண்ணுலகில் உயிரினம் எண்ணரிய பகுத்தறி | | வொண்ணிய மாந்தனே உயர்திணையே | | மிசை - விண்ணுலக வேந்துமில்லை இணையே | | தமிழ் - உலகவழக்கும் இதை | | இலக விளக்கி விடும் | | குமரி நிலமே | | எமரின் புலமே. |
|