பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்147

174. இந்தியெதிர்ப்பு
'தீரே தீரே' என்ற மெட்டு
ப.
ஏனோ தானோ என்றிராமல் இன்றே
      இந்தியை எதிர்க்க
இன்னுஞ் சின்னாள் ஏகினாலே
       எதுவும் இயலாது
து. ப.
போன நாளே பொன்னும் புலமும்
ஏனை யாவும் போஒய் இந்நாள்
எஞ்சும் மொழியொன்றே
இந்தி யாலே அதுவும் போகின்
இருக்கும் எழுத்தும்பின் ஏதமிழா!
இருந்த இடமுந் தெரியாதே போம்
எதிரும் நாகரியால்
(ஏனோ)
175. கட்டாய இந்தி வேண்டாமை
'விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி' என்ற மெட்டு வகை
1
கட்டாய இந்தி ஏன் கற்கவேண்டும் - நாமே
கைகட்டி ஏன் வடவர்க்கு யாண்டும் - முன்னே
    நிற்கவேண்டும் - இழி
    விற்கு மீண்டும்
(கட்டாய)
2
வடமொழி யாலிங்கு வந்த கேடு - பல
வாயிற்சொல்ல முடியாத பாடு - அவை
    வளரும் நீடு - இல்லை
    வரைய ஏடு.
(கட்டாய)
3
இந்தியினால் தமிழ்க் கென்ன நன்மை - அதால்
எல்லாச் சொல்லும் ஈறு கெட்ட தன்மை - எய்தும்
     மற்றும் வன்மை - இது
     முற்றும் உண்மை.
(கட்டாய)