|
20. தென்சொல் வளம் |
|
'சூகி முகுந்தேசி' என்ற மெட்டு |
ப. |
| செந்தமிழ்ச் சொல்வளமே - சேருளமே. |
|
1 |
| முந்தே யழிந்தன முன்னருந் தொகையே | | பிந்தே யுளசொலும் பெருமைகொள் வகையே (செந்) |
|
2 |
| இல்லகம் குடியே இருப்பிடம் மனையே | | உள்ளன உறையுளும் உணர்த்த வீட்டினையே (செந்) |
|
3 |
| இலைதாள் தோகை ஏனைவல் லோலை | | இருக்கும் தன்மையில் இலைவகை நாலே (செந்) |
|
4 |
| அரும்பே போதே அலர்வீ செம்மல் | | ஐந்தும் மலர்நிலை அறைந்திடும் செம்மை (செந்) |
|
5 |
| பிஞ்சே காயாம் பெரிதாய்க் கனியாம் | | பிஞ்சும் மூசொடு வடுகச்சல் தனியாம (செந்) |
|
6 |
| ஆதன் உறவி அறியும் புலம்பன் | | ஓதும் முழுவியல் உயிரினை விளம்பும் (செந்) |
|
7 |
|
| எழுவகை யிளம்பெண் ஏற்றன பெயரும் | | தழுவும் குரவர்பேர் தலையுமைந் துயரும் (செந்) |
|
8 |
| திரவிட மொழியும் தீர்வட வழியும் | | விரவிய அடிப்படை விழுத்தமிழ் விழியும் (செந்) |
|