பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்17

20. தென்சொல் வளம்
'சூகி முகுந்தேசி' என்ற மெட்டு
ப.
செந்தமிழ்ச் சொல்வளமே - சேருளமே.
1
முந்தே யழிந்தன முன்னருந் தொகையே
பிந்தே யுளசொலும் பெருமைகொள் வகையே
(செந்)
2
இல்லகம் குடியே இருப்பிடம் மனையே
உள்ளன உறையுளும் உணர்த்த வீட்டினையே
(செந்)
3
இலைதாள் தோகை ஏனைவல் லோலை
இருக்கும் தன்மையில் இலைவகை நாலே
(செந்)
4
அரும்பே போதே அலர்வீ செம்மல்
ஐந்தும் மலர்நிலை அறைந்திடும் செம்மை
(செந்)
5
பிஞ்சே காயாம் பெரிதாய்க் கனியாம்
பிஞ்சும் மூசொடு வடுகச்சல் தனியாம
(செந்)
6
ஆதன் உறவி அறியும் புலம்பன்
ஓதும் முழுவியல் உயிரினை விளம்பும்
(செந்)
7
எழுவகை யிளம்பெண் ஏற்றன பெயரும்
தழுவும் குரவர்பேர் தலையுமைந் துயரும்
(செந்)
8
திரவிட மொழியும் தீர்வட வழியும்
விரவிய அடிப்படை விழுத்தமிழ் விழியும்
(செந்)