|
உ. 1 |
| தேனேபோல் இனிதாம்நெய் தேடற்கெங்கும் முட்டும் | | தேரின் மருந்தாகும் தெரிந்தேயுள்ள மட்டும் | | ஆனாலும் தெவிட்டும் அளியும் அதிற் கொட்டும் | | அறிவு மயங்கும்உள் அனலும்நரை கிட்டும் (தானே) |
|
2 |
| கரும்பை யினிதென்று கண்டுசீனம் நின்று | | கலத்திற் சேரர்தந்த கதைவரலா றுண்டு | | விரும்பிய தைத்தின்ன விடலைப்பல்லே நன்று | | வெம்மை அதன்சாறு விளைக்கும் தெரிஇன்று (தானே) |
|
3 |
| தெளிவே பனஞ்சாறக் காரநீர்என் றாரும் | | தீங்கள் நறாவென்று தெரியும்பத நீரும் | | களியால் உணர்கொல்லும் கடும்பேரிசிவு நேரும் | | காலங் குன்றவழி கோலும்அது பாரும் (தானே) |
|
4 |
| தேவர்தம் அமுதென்று தெட்டுவதோ வம்பு | | திரைகடல் மீதது திரியும்குதிரைக் கொம்பு | | மூவர்தம் முன்னென்று மொழியும்அசுர் முன்பு | | முயன்று கடைந்ததை முகர்ந்திலராம் பின்பு (தானே) |
|
23. தமிழின்பம் |
|
'கோரினவர மொசகுமைய' என்ற மெட்டு |
பண் - (இராமப் பிரியம்) தாளம் - ஈரொற்று |
ப. |
| பேரிலுந்தமிழ் இனிமைதங்கும் பேரின்ப வாரி |
|
து. ப. |
| சாரும் எதுகை மோனை வண்ணம் | | சற்றுந்தவறாது நண்ணும். (பேரிலுந்) |
|