பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்19

உ. 1
தேனேபோல் இனிதாம்நெய் தேடற்கெங்கும் முட்டும்
    தேரின் மருந்தாகும் தெரிந்தேயுள்ள மட்டும்
ஆனாலும் தெவிட்டும் அளியும் அதிற் கொட்டும்
    அறிவு மயங்கும்உள் அனலும்நரை கிட்டும்
(தானே)
2
கரும்பை யினிதென்று கண்டுசீனம் நின்று
    கலத்திற் சேரர்தந்த கதைவரலா றுண்டு
விரும்பிய தைத்தின்ன விடலைப்பல்லே நன்று
    வெம்மை அதன்சாறு விளைக்கும் தெரிஇன்று
(தானே)
3
தெளிவே பனஞ்சாறக் காரநீர்என் றாரும்
தீங்கள் நறாவென்று தெரியும்பத நீரும்
களியால் உணர்கொல்லும் கடும்பேரிசிவு நேரும்
காலங் குன்றவழி கோலும்அது பாரும்
(தானே)
4
தேவர்தம் அமுதென்று தெட்டுவதோ வம்பு
திரைகடல் மீதது திரியும்குதிரைக் கொம்பு
மூவர்தம் முன்னென்று மொழியும்அசுர் முன்பு
முயன்று கடைந்ததை முகர்ந்திலராம் பின்பு
(தானே)
23. தமிழின்பம்
'கோரினவர மொசகுமைய' என்ற மெட்டு
பண் - (இராமப் பிரியம்)
தாளம் - ஈரொற்று
ப.
பேரிலுந்தமிழ் இனிமைதங்கும் பேரின்ப வாரி
து. ப.
சாரும் எதுகை மோனை வண்ணம்
    சற்றுந்தவறாது நண்ணும்.
(பேரிலுந்)