|
5 |
| வன்செயல்கள் செய்ததற்கு வண்மதுரைப் படுகொலையே | | முன்செயலாய்த் தூண்டியது முதிர்வித்ததும் சுடுகொலையே (தமிழைச்) |
|
6 |
| இந்தியை யெதிர்ப்பதெல்லாம் இன்றமிழைக் காப்பதுடன் | | முந்திய அடிமைத்தனம் மூளாமல் தீர்ப்பதற்கே (தமிழைச்) |
|
302. இந்திப்போராட்டத்தில் இறந்தவர்க்கு அமைதி |
|
பண் - காப்பி தாளம் - ஒற்றை |
ப. |
|
உ.1 |
| அண்ணா மலையார் நகரில் சுட்ட | | அரசேந் திரனின் ஆவி அடைக (அமைதி) |
|
2 |
| மதுரைக் கயவர் மடவாள் வெட்டால் | | மாய்ந்த தமிழ மணியும் அடைக (அமைதி) |
|
3 |
| எரிகை சுடுகை இரண்டால் இறந்த | | ஏனோர் ஆவி எல்லாம் அடைக (அமைதி) |
|
303. மாணவர்க்கு அறிவுரை |
|
'கைராட்டினமே' என்ற மெட்டு |
ப. |
|
உ.1 |
| ஆங்கிலந்தான் இங்கிருந்தே நீங்கியபின் - மேல் | | ஓங்குவ தில்லாமலே பின் வாங்கிடுவோம். (இள) |
|