பக்கம் எண் :

32இசைத்தமிழ்க் கலம்பகம்

4
ஆரியமோ சேமியமோ பேருமறி யாது
சீரியநற் செந்தமிழே பேசினோம்வ ழாது
5
திணைப்பிரிவே யன்றிவேறு குலப்பிரிவும் இல்லை
தினைத்துணையும் பகையின்றித் திளைத்தனம்நான் கெல்லை
6
முருகனொடு வள்ளியெங்கள் முன்னோரின் தெய்வம்
சரவணன்என் றொருகதைபின் சாற்றினார்என் செய்வம்.
7
தினைமாவைத் தெள்ளியதில் தேன்கலந்தே தின்போம்
மலையோரம் மேயவரும் மான்கறியும் உண்போம்
8
பாண்டியரும் வேட்டம்வரின் பாங்காகி விளிப்போம்
வேண்டியபல் லாட்டுகளும் விளையாடிக் களிப்போம்
9
மரவுரியும் மான்றோலும் துறவிகளுக் கிறைப்போம்
மருந்துகளும் சித்தருக்கு மருங்கிருந்தே யரைப்போம்
10
அடிமையென்றும் வறுமையென்றும் அறிந்ததில்லை நாங்கள்
குடிமைஎன்னும் ஓரினமாய்க் கூடிவாழ்ந்தோம் ஆங்கே.