பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்35

8
கொடுந்த மிழ்வட மொழியைக்
   கூடி நின்ற வழியே
கடுந்தி ரவிட மொழிகள்
   கலித்தெ ழுந்தன விழியே
9
குச்ச ரம்ம ராடம்
   கூர்வ டுகுகன் னாடம்
பச்சைத் தமிழி னோடும்
   பஞ்ச திரவிடம் ஓடும்.
10
முன்னி ரண்டுமிக் காலம்
   முற்றும் ஆரியம் போலும்
பின்னரே மலையாளம்
   பிறமொ ழிபதி னேழும்.
11
தெரியும் செந்தமிழ் இயல்பே
   திரவி டம்அதன் திரிபே
இருமை யும்தென் மொழியே
   இவைதென் குமரி வழியே
12
தேவ மொழியொன் றில்லை
   திரைக டலுல கெல்லை
தீவி யதமிழ்ச் சொல்லைத்
   தேரின் அதற்கே முல்லை