|
3 |
| சிந்துவெனும் ஆற்றுவெளி சேர்ந்த வேத ஆரியரால் | | இந்துவென நாவலம் பொழில் ஏற்றது பெயரே | | ஏற்றது பெயரே - மதம் | | மேற்றதுந் துயரே (இந்து) |
|
4 |
| செந்தமிழ மதமிரண்டு சிவனியம் மாலியமே என்று | | சீரறு நான்முகனை யவற்றில் சேர்த்ததே யிந்து | | சேர்த்ததே யிந்து - அதைத் | | தீர்த்தலே நன்று (இந்து) |
|
5 |
| நான்முகனைத் தமிழமக்கள் நம்பினதே யிலை வழக்கில் | | நாடும் வழிபாடவனுக்கு நடப்ப தில்லையே | | நடப்ப தில்லையே - கதை |
|
6 |
| சிவநெறியும் மால்நெறியும் சேர்வதில்லாத் தனிநெறிகள் | | சிவனெனவே மாலும் முத்தொழில் செய்வன் என்பாரே | | செய்வன் என்பாரே - அதன் | | மெய்ம்மையும் பாரே (இந்து) |
|
7 |
| முத்திரு மேனியர் முறையே முத்தொழிலர்எனுந்துறையே | | வைத்ததினால் பெரியன் யாரென வழக்கு மூண்டதே | | வழக்கு மூண்டதே - பெருஞ் | | சழக்கு நீண்டதே (இந்து) |
|
8 |
| இருதமிழ மதமும் இந்து என்றாரியம் ஏய்க்கும் வந்து | | என்மதமே சிவனியம் அன்றேல் மாலியம் என்பாய் | | மாலியம் என்பாய் - அதே | | மாயவம் முன்பாய் (இந்து) |
|