பக்கம் எண் :

58இசைத்தமிழ்க் கலம்பகம்

3
சிந்துவெனும் ஆற்றுவெளி சேர்ந்த வேத ஆரியரால்
இந்துவென நாவலம் பொழில் ஏற்றது பெயரே
                    ஏற்றது பெயரே - மதம்
                    மேற்றதுந் துயரே
(இந்து)
4
செந்தமிழ மதமிரண்டு சிவனியம் மாலியமே என்று
சீரறு நான்முகனை யவற்றில் சேர்த்ததே யிந்து
                    சேர்த்ததே யிந்து - அதைத்
                    தீர்த்தலே நன்று
(இந்து)
5
நான்முகனைத் தமிழமக்கள் நம்பினதே யிலை வழக்கில்
நாடும் வழிபாடவனுக்கு நடப்ப தில்லையே
                     நடப்ப தில்லையே - கதை
6
சிவநெறியும் மால்நெறியும் சேர்வதில்லாத் தனிநெறிகள்
சிவனெனவே மாலும் முத்தொழில் செய்வன் என்பாரே
                     செய்வன் என்பாரே - அதன்
                     மெய்ம்மையும் பாரே
(இந்து)
7
முத்திரு மேனியர் முறையே முத்தொழிலர்எனுந்துறையே
வைத்ததினால் பெரியன் யாரென வழக்கு மூண்டதே
                     வழக்கு மூண்டதே - பெருஞ்
                     சழக்கு     நீண்டதே
(இந்து)
8
இருதமிழ மதமும் இந்து என்றாரியம் ஏய்க்கும் வந்து
என்மதமே சிவனியம் அன்றேல் மாலியம் என்பாய்
                    மாலியம் என்பாய் - அதே
                    மாயவம் முன்பாய்
(இந்து)