பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்141

தமிழ்மொழியின் பழைமை

தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற்பெயரா யிருந்தமையாலும், சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக்கழகவுறுப் பினராய்க் கூறியிருத்த லாலும், சிவனே தமிழை உண்டுபண் ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம்.

தமிழ்நூல்களின் பழைமை

தொல்காப்பியர்

பெயர் - தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரேயாகும். இப் பெயருக்குப் பழைமை யான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படு கின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபின ராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொருளிருத்தல் வேண்டும்.

அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ் நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், 'முந்து நூல் கண்டு' என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல் காப்பியரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்ட னர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன