பக்கம் எண் :

158செந்தமிழ்க் காஞ்சி

   தி.பி.1981(1950) : "உயர்தரக் கட்டுரை இலக்கணம்" (மு.பா)-நூல்
    வெளியீடு.
   தி.பி.1982(1951) : "உயர்தரக்கட்டுரை இலக்கணம்" (இ.பா.) -நூல்
    வெளியீடு.
   தி.பி.1983(1952) : "பழந்தமிழாட்சி" - நூல் வெளியீடு.
   தி.பி.1984(1953) : "முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க
    விளக்கம்" - நூல் வெளியீடு.
   தி.பி.1985(1954) : "தமிழ்நாட்டு விளையாட்டுகள்" - நூல்
    வெளியீடு.
   தி.பி.1986(1955) : பெரியார் ஈ.வே.ரா.தலைமையில் நடைபெற்ற சேலம்
    "தமிழ்ப்பேரவை" இவரின் தொண்டைப் பாராட்டித்
    ‘திராவிட மொழிநூல் ஞாயிறு‘ எனும் பட்டம் வழங்கிச்
    சிறப்பித்தது.
    'A Critical Survey of Madras University Lexicon'
    என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது.
   தி.பி.1987(1956) : "தமிழர் திருமணம்" - நூல் வெளியீடு.
    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை
    யாளராகப் பணியிற் சேர்ந்தார்.
   தி.பி.1988(1957) : திசம்பர்27,28,29-ல் தில்லியில் நடைபெற்ற
    அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில்
    பங்கேற்றுச் சிறப்பித்தார்.
   தி.பி.1990(1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர்
    சூட்டப்பட்ட ‘தென்மொழி‘ இதழ் பாவலரேறு
    பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது.
    தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ்விதழ் இன்றளவும்
    பெரும் பங்காற்றி வருகிறது.
   தி.பி.1991(1960)   தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச்
    சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்த
    மைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு
    ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம்
    வழங்கப்பட்டது.
   தி.பி.1992(1961) : "சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்
    அகராதியின் சீர்கேடு" - நூல் வெளியீடு.
    -அண்ணாலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட
    சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும்,
    மக்களும் உண்டு- அதோடு எனக்கு மானமும்
    உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப்
    பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு
    தமிழும் வெளியேறியது என்று கூறினார்.
   தி.பி.1994(1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு.