| தாரணியி
லெம்மொழியுந் தமிழுக்கிணை யாகுமோ |
| தாய்மொழியைப்
புன்மொழிக்குத் தள்ளிவிடல் நீதமோ |
|
பார்ப்பனர் பலர்தமிழ்க்குப் பண்ணினர் துரோகமே |
| கூர்த்தறிவில்
லாப்பிறரும் கொண்டனர்இவ் ரோகமே. |
| பெற்றதாயிற்
பிறந்தநாட்டிற் பெரிதுகாணும் தாய்மொழி |
| பற்றலர்
கூடித்தமிழைப் பழிக்கவழி தேடினர் |
| இலக்கண
வரம்புகொண்ட தில்வுலகில் எம்மொழி, |
| விலக்கமின்றி
எவ்வகுப்பும் வித்தைகற்ற தெம்மொழி, |
| இந்துமுஸ்லீம்
கிறிஸ்தவர்க்கும் ஏனைப்பௌத்த ஜைனர்க்கும் |
| எந்தமதத்
தார்க்கும்வேதம் இருப்பதாகும் எம்மொழி, |
| பக்ஷபாதக
மில்லாமல் பற்பலவாம் ஜாதிக்கும் |
| தக்கநீதி
கூறும்நல்ல தருமநூலே திருக்குறள் |
| ஆதியறி
வாராதேஎம் அருமையான தொன்மொழி |
| வாதவூரர்
நைந்துருக வசிகரித்த தென்மொழி |
| கம்பரிளங்
கோவடிகள் காவியந்தேன் பொழியுமே |
| உம்பர்அமிர்
தம்அதற்கு உவமையின்றி ஒழியுமே |
| வீரமா
முனிவர் போப்பு வித்தகமெய்க் கால்டுவல் |
| வேறுதேச
மேனும்வாஞ்சை விஞ்சினர்செந் தமிழின்மேல் |
| செந்தமிழைச்
சீரழிக்கச் சிறுவர்மடி கட்டினர் |
| மந்தமாகத்
தூங்குந்தமிழ் மக்களே! விழித்தெழும் |
| தமிழிலன்றி
வருமரசு தன்னரசே யாகுமோ? |
|
எமரேயின்று ஒன்றுகூடி இந்தியை எதிர்த்திடும். |
| சாதிமத
பேதமின்றிச் சகலரும்முன் வாருங்கள் |
| நீதியாய்த்
தமிழரசு நிறுவுங்கள்இந் நாட்டிலே |
| எங்கும்இந்தி
கட்டாயம்தான் என்பதென்ன அண்டப்பொய் |
| வங்காளத்தில்
ஒருநாளும் வைத்திடுவ தில்லையே. |
| இந்தியில்லா
ஏனைநாட்டில் இந்தப்பேச்சே யில்லையே |
| மந்தமுள்ள
தமிழனைத்தான் மாட்டுகின்றார் வலையிலே |
| தாய்மொழியைத்
தள்ளுபவன் தானேபெரிய அடிமையன் |
|
வாய்மையா யவற்குவீடு வாய்ப்பதில்லை யென்றுமே, |
|
காங்கிரஸ்என் றால்அதற்குக் கங்குகரை யில்லையோ? |
| தீங்கதி
லிருந்தால்அதைத் தீர்த்துவிட வேண்டாவோ? |
| பிழைக்கவோ
இறக்கவோநீர் பேணிமருந்தை யருந்துவீர்? |