| 1. |
தேவனே உன்னைத்
தேடி வந்தோமே |
| |
காவ லாகவே
கருணை செய்குவாய். |
| |
|
| 2. |
சாமி நாதனே
சாற்றினேன் உன்னை |
| |
தீமை யாவையும்
தீர்ப்பாய் இன்னுமே. |
| |
|
| 3. |
என்றன் நாடெல்லாம்
இறைவனே உன்னை |
| |
என்றும்
ஏத்திய இசைந்து வாழச்செய். |
| |
|
| 4. |
அன்னை தந்தைநீ
அண்ணன் தம்பிநீ |
| |
முன்னும்
பின்னும்நீ மூவா மருந்துநீ. |
| |
|
| 5. |
அழியும்
பொருள்களை அகற்றி யுன்னைநாம் |
| |
செழிய
பொருளெனத் தேடச் செய்குவாய். |
| |
|
| 6. |
கலகம்
நீங்கியோர் கட்டா யிருக்கவே |
| |
உலகம்
யாவையும் ஒருமைப் படுத்துவாய். |
| |
|
| 7. |
அறிவில்
லாமையை அகற்றி எங்கட்கு |
| |
அறிவை ஆக்கியே
அரவ ணைத்திடாய். |