-
மற்ற நாடுகளெல்லாம் பெரும்பாலும் தாழ்ந்த நிலை யினின்று வரவர வுயர்ந்துவர, தமிழ்நாடு உயர்ந்த நிலையினின்று வரவரத் தாழ்ந்து வந்துள்ளமை. -
பழந்தமிழ்நாடு முழுகிப்போனமையும், ஆரியர் வருகைக்கு முந்தின தனித் தமிழிலக்கியம் அனைத்தும் அழிக்கப் பட்டுப் போனமையும். -
தமிழ் வரலாறு தலைமைப் பேராசிரியர்க்குந் தெரியாவாறு மறையுண்டு கிடத்தல். -
தமிழ், சிவ மதமும் திருமால் மதமும் தோன்றிய நாட்டு மொழியாயிருந்தும், திருக்கோவில் வழிபாட்டினின்று தள்ளப்பட்டுள்ளமை. -
தமிழருள் நூற்றிற் கெழுபதின்மர் தாய்மொழியிலும் எழுதப்படிக்கத் தெரியாதிருத்தல். -
வையாபுரிகள் பிற நாட்டினுந் தமிழ்நாட்டிற் பல்கி யிருத்தல். -
தமிழ் சமற்கிருதத் திரிபும் பன்மொழிக் கலவையுமான புன்சிறு புதுமொழி யென்று பார்த்தவர் கருதுமாறு, பிராமணத் தமிழ்ப் புலவரால் தொகுக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி 1936இல் வெளிவந்தமை. -
நயன்மைக் கட்சி (Justice Party) 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தோற்றுப் போனமை. -
தமிழ்ப் பற்றற்றுக் கட்சிவெறி மிக்க பேராயத் தமிழரின் பெரும்பான்மை. இங்கிலாந்தில் உள்ள மூவேறு அரசியற் கட்சிகளும் ஆட்சிமுறைக் கொள்கையில் முரண்பட்டவையேனும், தாய் மொழியாகிய ஆங்கிலத்தை உயிர்நாடியாகக் கொண்டவை யாகும். இங்குத் தமிழ் நாட்டிலோ, பேராயக் கட்சித் தலைவரான பிராமணர், இந்தி யெதிர்ப்பு எதிர்க்கட்சியாரின் அரசியலெதிர்ப்பு என்று சொன்னதை நம்பியதுடன், தமிழையே தி.மு.க. மொழி யென்று ஒரு கட்சித் தொடர்பாக்கி விட்டனர் பேராயத் தமிழர். திரு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சரான வுடன், மேற்கொண்டு 400 உயர்நிலைப் பள்ளிகளில் |