|
| (அ) மலர்களோ மோந்தால் வாடும்; விருந்தாளிகளோ சிறிது முகம் கோணினாலும் வாடிவிடுவார்கள். (ஆ) அறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள். (இ) தாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம். |
2.1.4 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் (ஒ.நோ. 3.1.2) |
| (அ) நாளைய விழாவில் பங்கேற்கப் போகிறவர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக: மதுரை 18; கன்னியாகுமரி 16; செங்கல்பட்டு 9; கோயம்புத்தூர் 30. (ஆ) பரிசு பெற்றவர்கள்; ரங்கநாயகி, காட்டுமன்னார்கோயில்; ரமேஷ்குமார், கோயம்புத்தூர்; கனிமொழி, மருவத்தூர். |
3. முக்கால்புள்ளி (:) |
| |
3.1 முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்: |
| |
3.1.1 செய்தியை அறிமுகப்படுத்தும் ‘என்னவென்றால்’ போன்ற சொற்கள் இல்லாதபோது (ஒ.நோ. 15.1.9) |
| போகும்போது எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது? |
3.1.2 தலைப்புபோல் பொதுவாகக் கூறப்பட்டதற்கும் அதன் விரிவாகக் கூறப்பட்ட விவரங்களுக்கும் இடையில் (ஒ.நோ. 2.1.4) |
| இளம் கவிஞர்கள் படிக்க வேண்டியவை: நிறைய நாவல்கள், சிறுகதைகள், கொஞ்சம் கவிதைகள். |
3.1.3 வரையறையை அல்லது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் ‘என்பது’, ‘என்றால்’ போன்ற சொற்கள் இல்லாதபோது (ஒ.நோ. 15.1.10) |
| (அ) சொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி. (ஆ) பட்டா: நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம். |
3.1.4 கூற்றை அறிமுகப்படுத்தும் ‘கூறியதாவது’ போன்ற சொற்கள் இல்லாதபோது |