பக்கம் எண் :

83

5. முதல் சொல்லின் இறுதி எழுத்து

எடுத்துக்காட்டு

தொடரும் சொல், விகுதி

சந்தி

விளக்கம்

பாக்கு+கசக்கிறது=
பாக்குக் கசக்கிறது

கருத்து+கேள்=கருத்துக் கேள்

மதிப்பு+தாழ்ந்து=மதிப்புத்
தாழ்ந்து

சிறப்பு+பெற்று=
சிறப்புப் பெற்று ஒரு
சுற்று+பெருத்து=ஒரு சுற்றுப் பெருத்து

க,ச,த,ப

மிகலாம்

-க்கு,-ச்சு,-ட்டு,-த்து,-ப்பு,-ற்று
என்று முடியும் (வன்தொடர்
குற்றியலுகர)
பெயர்ச்சொற்களின் பின்
ஒற்று மிகலாம்; குறிப்பாக,
‘பு’வில் முடியும் சொற்களின்
பின் ஒற்றை மிகுத்து
எழுதுவது பரவலாகக்
காணப்படுகிறது.
கேட்டு+சொல்=கேட்டுச் சொல்

செத்து+பிழை=செத்துப் பிழை

விற்று+கொடு=விற்றுக் கொடு

க,ச,த,ப

மிகும்

-ட்டு,-த்து,-ற்று என்று
முடியும் வினையெச்சங்களின்
பின் ஒற்று மிகும்.
அங்கு இங்கு+கண்டேன்

எங்கு

க,ச,த,ப

மிகலாம்

ஒற்று மிகுத்து எழுதுவதைத்
தவிர்க்கலாம்.
கண்டு+திகைத்து=கண்டு
திகைத்து

வந்து+காத்திரு=வந்து காத்திரு

செய்து+பார்=செய்து பார்

மென்று+சாப்பிடு=
மென்று சாப்பிடு

க,ச,த,ப

மிகாது

-ண்டு,-ந்து,-ய்து,-ன்று என
முடியும் வினையெச்சங்களின்
பின் ஒற்று மிகாது.
சுடு+சோறு=சுடுசோறு க,ச,த,ப

மிகாது

கூட்டுச்சொல்லில் முதற்சொல் வினையடியாக இருக்கும்போது ஒற்று மிகாது.
தேக்கு+கள்=தேக்குகள்

அச்சு+கள்=அச்சுகள்

பண்பு+கள்=பண்புகள்

மருந்து+கள்=மருந்துகள்

வாய்ப்பு+கள்=வாய்ப்புகள்

அம்பு+கள்=அம்புகள்

நாற்று+கள்=நாற்றுகள்

நோன்பு+கள்=நோன்புகள்

-கள்

‘க்’ மிகாது

-க்கு,-ச்சு,-ண்பு,-ந்து,-ப்பு,-ம்
,-ற்று,-ன்பு ஆகியவற்றில்
முடியும் பெயர்ச்சொற்களின்
பின் ‘-கள்’ விகுதி சேரும்
போது ஒற்று மிகுவதில்லை.