அவர் வறுமையைப் போக்க வழிதேட வேண்டும் என்றும்
கூறினாள்.
* * *
நேர்க்கூற்று
"இன்று இங்குத் தங்கி
நாளைக்கு இராமரிடம் போவேன்"
என்று பரதன் குகனிடம் கூறினான்.
அயற்கூற்று
அன்று அங்குத் தங்கி
மறுநாளைக்கு இராமரிடம் செல்வதாய்ப்
பரதன் குகனிடம் கூறினான்.
* * *
நேர்க்கூற்று
"இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என்று இராமர்
இராவணனுக்கு உரைத்தார்.
அயற்கூற்று
அன்று போய் மறு நாளைக்குப் போர்க்கு
வருமாறு இராமா
இராவணனுக்கு உரைத்தார்.
* * *
நேர்க்கூற்று
நாணன், "திண்ணா, நான்
திரும்பிவரும் வரைக்கும் இங்கே
நின்றுகொண்டிரு" என்று சொல்லிச் சென்றான்.
அயற்கூற்று
நாணன் திண்ணனைத் தான் திரும்பி வரும்
வரைக்கும்
அங்கே நின்று கொண்டிருக்குமாறு வேண்டிக்கொண்டு
சென்றான்.
|