3
நிகழ்நிலை யியல்
இக்காலத்தில், சமணம் புத்தம் ஆகிய வடநாட்டு மதங்களைத்
தழுவிய ஒருசிலரும், கிறித்தவம், இசலாம் ஆகிய மேனாட்டு மதங் களைத் தழுவிய பெருங்கூட்டத்தாரும்,
தமிழருள் உள்ளனர்.
1. திருநான்மறை ஆராய்ச்சி
சிவனியம் மாலியம் என்னும் இரு
தமிழ மதங்களினின்றும் ஆரியக் கூறுகளை நீக்கும் முயற்சி, திருவள்ளுவர் காலத்தினின்று தொடர்ந்து
வருகின்றது.
பல்லவபுரம் தவத்திரு மறைமலையடிகள்,
திருவாசகப் போற்றித் திருவகவலுக்குத் தாங்கள் வரைந்த விரிவுரையில், "மூவா நான்மறை முதல்வா
போற்றி" என்னும் அடியிலுள்ள "மூவா நான் மறை" என்னுந் தொடர்ச்சொல், தொல்காப்பியம்,
இறைய னாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும்,
வடமொழி நான்கு வேதங் களைக் குறிக்காதென்றும் கூறினார்கள். அதைத் திருச்சி மா. சாம்பசிவப்
பிள்ளை எதிர்த்து ஒரு மறுப்புரை வெளியிட்டார்.
அதன்பின், பேரா. கா.சுப்பிரமணியப்
பிள்ளை செந்தமிழ்ச் செல்வி முதற் சிலம்பில், 'திரு நான்மறை விளக்கம்' என்னும் தலைப்பில்,
நான்மறை என்பன தமிழ்நூல்களேயென்று ஒரு தொடர் கட்டுரை வெளியிடுவித்தார். அதன் கருத்து:
சிவபெருமான், நம் தமிழ்நாட்டில்,
ஒரு கல்லால மரத்தின் கீழ்த் தமிழ்மக்கள் நால்வர்க்கு அறம்பொருளின்பம் வீடென்னும் உறுதிப்
பொருள் நான்கினையும் உணர்த்தினார். அத் தமிழறிஞர், திருக்குறள் போன்ற நான்மறை நூல்களையும்,
அவற்றிற்குத் துணையாக அறுவகை உறுப்பு நூல்களையும் இயற்றினர். அவை தலைக் கழகக் காலத்துக் கடல்கோளில்,
கழக நூல்களுடன் அழிந்துபோயின. நம் சிவனியக் குரவர் கருத்தும் இதுவே என்பதேயாம்.
இதையும் சாம்பசிவப்
பிள்ளை மறுத்து, 'திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி' என்னும் 236 பக்க எதிர்நூலொன்று வெளியிட்
|