New Page 1
(2) |
இந்துமதம் என்பது, ஒரு தனி
மதமன்றி ஆரியமும் தமிழமுஞ் சேர்ந்த கலவை மதம். |
|
|
(3) |
இந்துமதத் தெய்வங்களான முத்திருமேனிகளுள்,
படைப்புத் தொழிலனான நான்முகன்(பிரமன்) என்னும் ஆரியத் தெய் வத்தை, தமிழர் தொடக்கந்தொட்டு
ஒப்புக் கொள்ளவில்லை. அவன் சிவனையே ஏமாற்றின படுமோசப் பொய்யன் என்றும், ஓங்காரப்
பொருள் தெரியாது முருகனாற் குட்டுப் பட்டவன் என்றும், கதைகள் தோன்றியுள்ளன. |
|
|
(4) |
சிவன் என்றும் திருமால் என்றும்
இருவேறு பெயராற் குறிக் கப்படும் ஒரே இறைவன், காப்புத்தெய்வ மென்றும் அழிப்புத் தெய்வமென்றும்
இருவேறு தெய்வங்களாகக் காட்டப்பட் டுள்ளான். |
|
|
(5) |
முத்தொழில் இறைவனான சிவன்
அல்லது திருமால், ஒரே தொழில் தலைவனாகக் குறிக்கப்பட்டுள்ளான். |
|
|
(6) |
ஒரே இறைவனை இருவேறு தெய்வமாகக்
காட்டியதால், சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்னும் மதப் போர் மூண்டுள்ளது. |
|
|
(7) |
பொய்யும் புரட்டுமான பல
கதைகளும் கொள்கைகளும் கூற்றுகளும், ஆரியத் தொன்மங்களிலும் கொண் முடிபியலி லும் மெய்ப்
பொருளியலிலும் கூறப்பட்டுள்ளன. |
|
|
(8) |
ஆரியன் நிலத்தேவன் என்று
உயர்த்தப்பட்டும், தமிழன் 'சூத்திரன்' என்று தாழ்த்தப்பட்டும் உள்ளனர். |
|
|
(9) |
இந்துமதத்தால் தமிழப் பண்பாடு
அழிக்கப்படுகின்றது. |
|
|
(10) |
இந்துமதத்தால் தமிழ் வழிபாடு
எதிர்க்கப்படுகின்றது. |
|
|
|
ஆதலால், இனிமேல், சிவநெறியான்
தன்னைச் சிவனியன் என்றும், திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே குறித்தல் வேண்டும்.
இரு நெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின், தென் மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்று குறித்தல்
வேண்டும். |
இந்து உயர்நிலைப்
பள்ளியென்றும், இந்துக் கல்லூரியென் றும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கல்விநிலையப் பெயர்களைத்
தென்னவர் உயர்நிலைப் பள்ளி, தென்னவர் கல்லூரி யென்று மாற்றல் வேண்டும். மூத்த தலைமுறையைச்
சேர்ந்த பெரியோர் பெரும்பாலும் அடிமையராயும் பேடியராயும் இருத்தலால், இளந் தலைமுறையைச் சேர்ந்த
மாணவரே பெருங் கிளர்ச்சிசெய்து இம்
|