க
கலுழ்தல் = கலத்தல். கலுழ் -
கலுழன் = வெண்டலையும் செவ் வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை.
கலுழன்- வ. கருட(garuda).
திருமால் படை
சங்கு, சக்கரம், வில், வாள்,
தண்டம் என்னும் ஐந்து.
ஐம்படை யுருவாகச் செய்த ஐம்படைத்
தாலி யென்னும் அணியை, மத வேறுபாடின்றிச் சிறு பிள்ளைகட்குத் தொன்று தொட்டுக் காப்பாக அணிந்து
வந்திருக்கின்றனர்.
"தாலி களைந்தன்று மிலனே" |
(புறம். 77) |
|
|
"பொன்னுடைத் தாலி யென்மகன்" |
(அகம்.
54) |
|
|
"அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக் |
|
குதலைச் செவ்வாய்க் குறுநடைப்
புதல்வர்" |
(மணிமே.
7:56-7) |
|
|
"அழகிய வைம்படையு மாரமுங் கொண்டு" |
(பெரியாழ்.
திரு. 1:4:5) |
|
|
"ஐம்படை சதங்கை சாத்தி" |
(பெரியபு.
தடுத்தாட். 4) |
|
|
"தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே" |
(கலிங்.
அவ. 9) |
|
|
"தாலி யைம்படை தழுவு
மார்பிடை" |
(கம்பரா.
நாடு. 58) |
|
|
"ஐம்படை மார்பிற் காணேன்" |
(திருவிளை.
39 : 25) |
திருமால் நிலைகள்
வானிற் கலுழனூர்தலும், நிலத்தில்
நிற்ற லிருத்தல் கிடத்தலும். கிடத்தற்குச் சிறந்த இடம் திருவரங்கம்.
திருவரங்கம் - வ. ஸ்ரீரங்க.
திருமால் தொழில்
படைப்பு காப்பு அழிப்பு என்னும்
மூன்று.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும் |
|
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா |
|
அலகி லாவிளை யாட்டுடை யாரவர் |
|
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே." |
(கம்ப.சிறப்புப்
பா. 1) |
திருமால் வழிபாடு
அக்கமாலைக்குத் தலைமாறாகத் துளசிமணி மாலை யணிந்து, திருநீற்றிற்குத் தலைமாறாகத் திருமண்
காப்புச் சாத்தி, 'சிவபோற்றி' என்பதற்குத் தலைமாறாக 'மால் போற்றி' அல்லது
|