வ
விண்ணுலகத் (த்யுலோக) தெய்வங்கள்:
சூரியன், விசுவே தேவர், அசுவினியர் முதலியன.
அக்கினி, இந்திரன் முதலிய சில
தெய்வங்கள் மூவகை யுலகிற்கும் உரியன.
வேதக்கால ஆரியத் தெய்வநிலைகள்
(1) |
எல்லாத் தெய்வங்களும் சிறுதெய்வ
நிலையின. |
|
|
(2) |
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு
தெய்வம் தலைமையாய் இருந்திருக்கின்றது. |
|
|
(3) |
சில தெய்வங்களைப்பற்றிக்
கருத்து வேறுபாடுகள் இருந் திருக்கின்றன. |
|
|
(4) |
ஒரே தெய்வத்தைப்பற்றியே
பகுத்தறிவிற் கொவ்வாத முரண் பட்ட கூற்றுகளும் உள்ளன.
எ-டு: இந்திரன் தன் தாய் தந்தையரைப்
படைத்தான். தக்கன் (தக்ஷன்) அதிதியைப் படைத்தான்; அதிதியிடம் தக்கன் உண்டானான். |
|
|
(5) |
இயற்கைத் தோற்றங்களெல்லாம்
தெய்வங்களாக்கப் பட்டுள்ளன. |
|
|
(6) |
வாரணன் என்னும் நெய்தல்நிலத்
தமிழ்த் தெய்வம், கிரேக்க ரிடையும் கீழை யாரியரிடையும் வானத்தெய்வமாக மாறி, மீண்டும்
தமிழர் தொடர்பால் நீர்த் தெய்வமாகவும் கடல் தெய்வமாகவும் முந்து நிலைக்குத் திரும்பிற்று. |
|
|
(7) |
இந்திரன் என்னும்
வடநாட்டுத் தெய்வம், பெயர் மாறிய வேந்தன் என்னும் மருதநிலத் தமிழ்த் தெய்வமே. |
|
|
(8) |
பிரமன் என்னும் ஆரியப் படைப்புத்
தெய்வம், இருக்கு வேதக்காலத்தில் தோன்றவில்லை. |
|
|
(9) |
முருகன், சிவன், காளி, திருமால்
என்னும் தமிழச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பு
மில்லை. |
|
|
(10) |
மங்கலம் அல்லது நன்மை என்று
பொருள்பட்டு, அக்கினி இந்திரன் உருத்திரன் ஆகிய முச் சிறுதெய்வங்கள் பெயர்க் கும் அடைமொழியாய்
வழங்கிய 'சிவ' என்னும் எச்சச் சொல் வேறு; சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என் னும்
தமிழப் பெருந் தேவன் பெயர் வேறு. |
|