வ
வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய
பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன்கட்டை
யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப்
பற்றியதாகும்.
"தெய்வந் தொழாஅள் கொழுநற்
றொழுதெழுவாள் |
|
பெய்யெனப் பெய்யும் மழை" |
(குறள். 55) |
என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும்
சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும்
இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.
தீயானது, கொல்லுந்தன்மையால்,
அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட் டியும் குளிரகற்றியும்
நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும் உரிய தாயிற்று.
(5) அன்பு
இருதிணைப் பகையையும் அழித்தும்,
உணவிற்கு வழிவகுத் தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின்,
அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்புபற்றியதாகும். இதினின்றே, விண் ணுலக வேந்தன்
(இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.
(6) கருதுகோள்
முதற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலேயே
வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந் நிலத்திற்கேற்ப ஒவ்வொரு
தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெரு நிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும்
பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல் தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக்
கருதப்பட்டது.
கண்ணாற் காணும் இயற்கைக் கூறுகளும்
நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம்
கருதுகோளின் விளைவேயாகும்.
நீரூட்டியும் நீராடுவித்தும்
உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவுபற்றி வணங்குவது வேறு;
|