பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1103

(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42). 6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).

நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)

நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).

நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.

"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" 

(தாயு. பரிபூர.13).

நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.

 

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு" 

(மூதுரை,17)

என்பதை நோக்குக.

பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.

எ-டு :

ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.

நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு,ஏழ்குறும்பனை நாடு.

பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.

ஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.

"ஏழுடையான் பொழில்" 

(திருக்கோ.7)