பாலைநிலத் தலைவர், வேந்தரால்ஏவப்படும்போது மட்டுமன்றி, வலிமையற்ற வேந்தர்ஆளும்போதும், அடுத்துள்ள முல்லைநிலத்துஆநிரைகளைக் கவர்வது வழக்கம். இங்ஙனம் ஒருபுறம் பாலை மறவரால் நிரைகவரப்பட்டும், மற்றொருபுறம் கோநாய் புலி முதலியகாட்டுவிலங்குகளால் மந்தை யாடுமாடுகள்அடிக்கப்பட்டும், இடர்ப்பட்டு வந்த இடையர்,தற்காப்பு வினையிலும் தடுப்பு வினையிலும்தொடர்ந்து ஈடுபட்டதனால், நாளடைவில்குறிஞ்சிநிலக் குறவர்க்கும் பாலைநிலமறவர்க்கும் எள்ளளவும் இளைக்காத காளையரும்ஆளியரும் ஆயினர். ஆயினும், பாலைநிலத்தார்போல்வலியப் போர்க்குச் சென்றதில்லை. ஆயின், வந்தபோரை விட்டதில்லை. ஆயர் போல ஆய்ச்சியரும்மறமிகுந்து பாலைநிலத்திற்கும் சென்று ஆனைந்துவிற்றனர். பாலைநிலத்தார்போற் சூறையாடலையும்போர்புரிதலையும் வாழ்க்கைத் தொழிலாகக்கொள்ளாது, ஆடவர் ஆடுமாடெருமை யாகிய முந்நிரைகளைமேய்த்தும், வானாவாரிப் பயிர்களை விளைத்தும்,பெண்டிர் பால் தயிர் மோர் வெண்ணெய்நெய்யாகிய ஆனைந்தைக் குறிஞ்சி பாலை மருதம்ஆகிய முந்நிலத்தும் விற்றும், அமைதியாகவாழ்க்கை நடத்திவந்த ஆயர், தம் மறத்தைக்குன்றாமற் காத்தற்கும் தம் உடல் வலிமையைமேன்மேல் வளர்த்தற்கும், ஏறுதழுவல் என்னும்பெண்கோடல் முறையை ஏற்படுத்தினர். ஆயர் குலத்தில் வினைவல பாங்கரல்லாதஉயர்குடியிற் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும்,பிறந்தவுடன் அவ்வப் பெண்ணின் பெயரால் ஒவ்வொருசேங்கன்று ஒதுக்கப்பெற்றது. அக்கன்றுகளை,வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்தவூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவைகொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில்,கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்றகால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச்சிவந்த கண்களுடனும், கண்டார் அஞ்சும்கடுந்தோற்றத்தை அடைந்தன. ஆண்டுதோறும்,பூப்படைந்து மணத்திற் கேற்ற கன்னியர்க்குரியகாளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி,ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக்கப்பட்டஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொருகுமரியையும் மணக்க விரும்பும் ஆயர்குலக் குமரர்அவ்வக் குமரிக்குரிய காளையைத் தனிப்படப்பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்துவிட்டனர். அவை இருமருங்குங் கூடிநிற்கும்பெருங்கூட்டத்தைக் கண்டும், அக் கூட்டத்தாரின்ஆரவாரத்தொடு கூடிய பல்லியப் பேரோசையைக்கேட்டும், மருண்டு மிரண்டு, கூற்றுவன் தூதர்போற்கொடிய பார்வையுடன், வாலை முறுக்கியும் காலைக்கிளப்பியும் உடலை வளைத்தும்
|