பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்"என்றிருப்பது, குமரி நாட்டினின்று நாகரிகவளர்ச்சியில்லா நிலையில் மேனாடு சென்றமாந்தர் வழியினர், நாளடைவில் வெள்ளையராகி,பிற்காலத்தில் அங்குச் சென்ற நாகரிகமாந்தரின் மகளிரை மணந்துகொண்டனர் என்பதையேகுறிக்கும். அதே அதிகாரம் 4ஆம் திருமொழியில்"அக்காலத்தில் அரக்கர் ஞாலத்திலிருந்தனர்" என்பது, ஆப்பிரிக்க மாந்தர்அக்காலத்திலும் கருத்தும் பருத்தும் இருந்ததையேகாட்டும். இனி, 7ஆம் 8ஆம் அதிகாரங்களில்வெள்ளச் செய்தியையும், 9ஆம், 10ஆம்அதிகாரங்களில் நோவாவின் மரபுப்பெருக்கத்தையும், கூறியபின், 11ஆம் அதிகாரம் 2ஆம்திருமொழி, "மக்கள் கிழக்கே யிருந்துவழிநடந்து வருகையில், சினெயார் நாட்டிற்சமநிலத்தைக் கண்டு, அங்கே குடியிருந்தனர்"என்றிருப்பது, கடல்கோட்குப்பின், நாவலந்தேயத்தினின்று ஒரு கூட்டத்தார் நிலவழியாகமேலையாசியா சென்று தங்கினர் என்பதையேதெரிவிக்கும். கடல்கோளச்சத்தினால் மட்டுமன்றி,வாணிகஞ் செய்தற்கும் தமிழர் பலர் வடக்கேசென்று கங்கை நாட்டிற் குடியேறினர். குறிஞ்சித் தெய்வமாகிய சேயோன்வணக்கத்தினின்றே சிவநெறி திரிந்ததனால்,சிவனுக்கும் மலையகமே சிறந்த இருக்கையாகக்கொள்ளப்பட்டது. பனிமலை கடலடியினின் றெழுந்தபின்பும், குமரிமலையின் பெருமைகுன்றாதிருந்ததனால், அஃதிருந்தவரை பாண்டியன்பெருமிதத்தோ டிருந்தான். அஃது மூழ்கியபின், அவன்தன் நாட்டின் சிறுமையையும் தாழ்வையும்நீக்குவதற்காக மட்டுமன்றி, தன் குடிதொன்றுதொட்டு வழிபட்டுவந்த சிவனுக்கு ஒரு தகுந்தஇருக்கை யமைக்கவுமே, பனிமலையைக்கைக்கொண்டான். அம் மலையின் மேற்பகுதிவெண்பனிக்கட்டி மூடி என்றும் வெண்ணிறமாய்த்தோன்றுவதால், வெள்ளிமலை யெனப்பட்டது. அதன்கொடுமுடியே சிவனிருக்கை யாகவும் மண்ணுலகப்பேரின்ப நிலையமாகவும், சிவநெறியாராற் கருதப்பெற்றது. பாண்டியர் பன்முறை பனிமலைமேற்கயற்பொறி பொறித்தது, வேத்தியல் மட்டுமன்றித்தேவியல் தொடர்புங் கொண்டதாகும். இக்காலத்தமிழகச் சிவமடங்களும் வெள்ளிமலைத் தொடர்புகூறுதல் காண்க. சிவனடியார்க்குச் சிறந்த அக்கமணி(உருத்திராக்கம்), பனிமலை யடிவாரத்துள்ள நேபாளநாட்டிலேயே தொன்றுதொட்டு விளைகின்றது.பஃறுளியாறு மூழ்கிய பின் கங்கையாறே நாவலந்தேயப் பேரியாறானதனாலும், வெள்ளிமலையைத் தன்குடுமியாகக் கொண்ட பனிமலையினின்று அது தோன்றிவருவதனாலும், சிவநெறியார்க்கு அதுவே தலைசிறந்ததிருநீர்நிலை யாயிற்று.
|