நிகழ்ச்சிகளும், தமிழர்க்குத் தெரிந்துஇலக்கியத்திலும் குறிக்கப் பட்டன. கங்கை சிந்தாறுகளும், சோணை, வாரணை,அசி, தொழுனை முதலிய கங்கைக் கிளைகளும் பண்டைத்தமிழ்ப் புலவர்க்குத் தெரிந்திருந்தன. கங்கை நாட்டில் முதற்கண்குமரிநாட்டினின்று சென்ற தமிழரேகுடியிருந்தமையால், ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும்ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன.முதலிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரிஎன்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து,பின்னர்ப் பொது வீறுகளாயின. புரம் = உயர்வு,உயர்ந்த கட்டடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த)கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்திற்பாடலிபுரம் எனத் திரிந்தது. காளிவணக்கங்கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக்கங்கைக் கரையிற் காளிகோவிலுடன் அமைத்த நகரேகாளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த்தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூயதென்சொல். காளிக்கோட்டம் என்பது, இன்றுஆங்கிலச்சொல் வழியாகக் கல்கத்தா எனத்திரிந்துள்ளது. கங்கைக் கயவாய் அடுத்துத்'தம்லுக்' அல்லது 'தமுல்க்' என்னும் பெயர்கொண்டுள்ள துறைநகர்ப் பெயர், தமிழகம் என்னும்சொல்லின் திரிபாயிருக்கலாம். 'தமலித்தி' என்றுபாலிமொழியிலும், 'தம்ரலப்தி' என்றுசமற்கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர்,தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்றதென்சொல்லின் திரிபா யிருக்கலாம். வேம்பாய் (Bombay)மாநிலப் பகுதி முழுதும் பதினெண்குடி வேளிர்பரவியிருந்ததனால், வேளகம் எனப்பட்டது. கண்ணன் ஆண்ட குச்சரநாட்டுமேற்பகுதியின் தலைநகர்ப் பெயரான துவாரகைஎன்னும் சொல், துவரை என்னும் தமிழ்ச்சொல்லின்திரிபே. எருமை (மைசூர்) நாட்டுத் துவரை நகரில்கி.பி. 2ஆம் நூற்றாண்டு ஆண்டுகொண்டிருந்தஇருங்கோவேள், தன் ஆள்குடியின் 16ஆம்தலைமுறையினன் என்று சொல்லப்படுவதால், அவன் குடிமுதல்வன் கண்ணன் காலத்தவனாகவே யிருந்திருத்தல்வேண்டும். அது கி.மு.1000. "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே.............." | (புறம்.261) |
என்று இருங்கோவேள் கபிலரால்விளிக்கப் பெற்றமையையும், அவன் வேள் என்றுபெயர் பெற்றிருந்தமையையும் நோக்குக.
|