ஒரு பருந்தினால் துரத்தப்பட்ட புறா,செம்பியன் என்னும் சோழன் காலடியில் வீழ்ந்தது.அவன் அதைக் காத்தற்கும் பருந்தின் பசியைத்தீர்த்தற்கும், தன் உடம்பினின்று அப் புறாவளவுதசையறுத்துப் பருந்திற் கிட்டான். இச் செய்திபின்னர்த் தொல்கதை முறையில்விரிவாக்கப்பட்டது. "நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக" | (புறம்.43) |
என்று செம்பியன் வழிவந்த சோழன்நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்விளிக்கப்பட்டமை காண்க. செம்பியன் பெயர்அவனுக்குப் பிற்பட்ட சோழர்க்கு ஒருகுடிப்பெயராயிற்று. அக்காலத்தில் இலங்கையில் அரக்கர்என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார்இருந்திருக்கின்றனர். அவர் மாயக்கலையில் வல்லவராயிருந்ததனால், பிற்காலத்தில், ஆரியத்தொல்கதைஞர், அவரை வானியங்கும் அல்லதுமக்களினத்திற்கு அப்பாற்பட்ட பதினெண்கணத்தாருள் இரு கணத்தாராகக் கொண்டனர் போலும்!அரக்கர் அரசன் இராவணன். அவன் தலைநகர் இலங்கை.இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன்தலைநகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம்தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இருபொக்கசம் (நிதி) ஈட்டி வைத்திருந்ததாகச்சொல்லப் படுகின்றான். இரு என்னும்சொல்லிற்குப் பெரு என்றும் இரண்டு என்றும்பொருளுண்டு. அச் சொல் நிதி என்னும் வடசொல்லைத்தழுவும்போது, இடையில் மகரமெய் தோன்றா தாதலால்,இருபொருட்கும் பொதுவாக நிற்கும். அதனால், இருவேறுபொக்கசம் என்று தொல்கதைஞர் கொண்டிருக்கலாம்.உண்மையில் இருவேறு பொக்கசமாயின், ஒன்றுமூலபண்டார மாகவும் இன்னொன்று வழங்கும்பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும். அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட்பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடும்போரில்,இயக்கர் குலம் வேரறுக்கப்பட்டது. பிங்கலன்தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய்விட்டான்.பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்)தமிழகத்தில் நாட்டுப்புறத் தெய்வமும் ஆனாள்.
|