யாணின் பெயர். சே என்பது விலங்காணின் பெயர். எ-டு:சேங்கன்று = ஆண்கன்று. சே-சேவு-சேவல். ஏனம் என்பதுகரியது என்னும் பொருளுள்ளது. ஏனல் = கருந்தினை.ஏனை-யானை. கண்டி = கடியது (கடுமையானது). "சேவும் சேவலும் இரலையும் கலையும் ........................................................ போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப" | (1501) |
என்று முன்னரே நூற்பாவில் சேவல், கண்டி, கடுவன் என்னும் முச்சொற்களை ஆண்பாற்பெயராகத் தொல்காப்பியங் குறித் திருத்தல்காண்க. ஆயினும், தொல்காப்பியர்க்கு இருபதுநூற்றாண்டுகட்குப் பிற்பட்டுத் தோன்றியநன்னூலார், தமிழின் தூய்மையைக் காவாது, எல்லாவடசொற்களையும் தமிழில் வழங்க இடந்தந்ததுபோன்றே, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" | (நன்.462) |
என்று வழுப்படக் கூறிவிட்டார். இதுதழுவத் தக்கதன்று. சுருக்கம் சுருங்கச் சொல்லல் ஒரு பண்பாட்டுக்கூறாகப் பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டது. "பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்." | (குறள்.196) | "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர்" | (குறள்.946) |
என்றார் திருவள்ளுவர். ஒருவன் கூலக்கடைக்குச் சென்று,கடைகாரனிடம் பாசிப்பயறு (பச்சைப்பயறு) உள்ளதாஎன்று வினவின், கடைகாரன் அஃதில்லா விடத்து,உழுந்தல்லதில்லையென்று தன்னிடமுள்ள வேறொருபயற்றை அல்லது சரக்கைப்பற்றிச் சொல்லவேண்டுமென்றும், வினவிய பொருள்மட்டுமே யிருக்குமாயின்,அதை இப் பயறல்ல தில்லையென்று சுட்டிக் கூறவேண்டுமென்றும், இங்ஙனங் கூறின் மேற்கொண்டு பலவினாக்களும் விடைகளும் வீணாக எழாவாறுதடுக்குமென்றும், பண்டையிலக்கண நூலார்வணிகர்க்குச் சொன்னது, மற்றெல்லாத்தொழிலாளர்க்கும் பொருந்தும் பொதுவாய்பாடாகும்.
|