பக்கம் எண் :

முன்னுரை21

தமிழ் எகிப்தியம் தமிழ் எகிப்தியம்
அது, அந்த
இரு
இறைவன் உமட்டு உந்தி, ஓதம்சப்பு
உறிஞ்சிக்குடி)
சும்-சம்
செம்மை
தா
தெ
அர்
எர்ப்ப
எமெத்
உவத்தூர்(நீர்) சௌ(குடி)
.
சென்ப்(b)
து
துமி
.
நக்கு நவ்வி(இளமை)
மடி-மரி மன்(நிலைபெறு)
மனை
மாது
வாரி
தெம்
(வெட்டுங்கருவி)
லெக்கு
நொவ்வெர்(f)
மெர்
மென்
மென்
மெத்தெர்
முத் (தாய்)
மெர் (கடல்)

மகள், மடந்தை, மாது முதலிய சொற்கள், இடத்திற்கேற்பப், பெண், புதல்வி, மனைவி, தாய் என வெவ்வேறு பொருள்படும்.

எ-டு:

மகள்= 1. பெண். "ஆயமகள் நீயாயின்" (கலித். 107)

"மகளிர் மலைத்த லல்லது" (புறம். 10)

மகள்-மகடூஉ

2. புதல்வி."நல்கூர்ந்தார் செல்வமகள்" (கலித். 56)

3. மனைவி."மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம்"(மணிமே. 21 : 30)

4. தாய்.

நிலமகள். மலைமகள், கலைமகள், திருமகள், தமிழ்மகள் முதலிய வழக்குகளை நோக்குக.

5. தமிழ் வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல்

இந்திய வரலாற்றுத் தந்தையும் ‘இந்தியாவின் முந்து வரலாறு‘ (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்செந்து சிமிது(Vincent Smith) என்பவர், அந் நூன் முகவுரையில் பின்வருமாறு வரைந்திருக்கின்றார்:

சமற்கிருத நூல்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவிற்குமிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப் பட்டு வந்திருக்கின்றது. ஆரிய மல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப்பதற்குக் காலம் வந்துவிட்டது.