பக்கம் எண் :

88தமிழ் வரலாறு

(11) மரூஉ

சில தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் தொடர்ச் சொற்களும், வழக்காற்றில் மருவி, அதாவது இலக்கணியரால் ஒப்புக்கொள்ளப்பெறும் வகையில் குறுகியும் திரிந்தும் வழங்கு கின்றன.

எ-டு:

தனிச்சொல் : எலும்பு-என்பு, தென்கு-தெங்கு, நடுவண்-நாப்பண், நெருநல்-நெருநற்று-நேற்று, பகுதி-பாதி, பெயர்-பேர், பெருமகன்- பெருமான்-பெம்மான், பிரான்; பொழுது-போழ்து-போது, யானை-ஆனை, வியர்-வேர்.

கூட்டுச்சொல் : அரையுழக்கு-ஆழாக்கு, சுமையடை-சுமடு-சும்மாடு, சோழ நாடு - சோணாடு, தெங்கங்காய்-தேங்காய், புகவிடு-புகட்டு-போட்டு, புழைக்கை-பூழ்க்கை-பூட்கை, போகவிடு-போகடு-போடு, வரை யாடு-வருடை, மார்யாப்பு-மாராப்பு, முகக்கூடு-முக்காடு.

தொடர்ச்சொல்

அருமருந்தன்ன-அருமாந்த-அருமந்த.

கரிவலம் வந்த நல்லூர்-கருவை.

பூட்கை, போடு என்பனபோன்ற சொற்கள், மூலநிலையில் கூட்டுச் சொல்லாயினும், மரூஉ நிலையில் ஒருசொற்போல் நின்று ஒரே பொருள் தருதலால், தனிச்சொல்லாகவே கொள்ளப்படும்.

(12) முன்னொட்டுகளும் அடைகளும் (Prefixes and Epithets)

பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு
காலமும் இடமும் மூவிடம் முன்,
பின்,
உடன்
எம், உம், (நும்), தம்எம்பி,உம்பி,(நும்பி),தம்பி.
முன்னேறு, பின்வாங்கு,
உடன்படு
.
.
.
சிறுமை அரி
அரிசி
அரை
உமி
ஊசி
எலி
அரிநெல்லி, அரிக்குரல்.
அரிசிப்பல்,அரிசிக்களா
அரைத்தவளைஅமித்தூறல்
ஊசிமிளகாய், ஊசித்தொண்டை, ஊசிவெடி
எலியாமணக்கு