|
(6) வினைமுற்றீறு
அது-து-வந்தது, வருகின்றது, வருவது, வராதது.
இதுவும் சுட்டடிச் சொல்லாயினும், வினைமுற்
றீறாயிருத்தல் பற்றி வேறு கூறப்பெற்றது. வந்தது=வந்த
அது. வராதது-வராத அது. தொழிற்பெயரீறுகளின் சிறப்புப்
பொருள்
ஒரு வினைமுதனிலை பல ஈறுகள் பெற்றுப் பல்வேறு
தொழிற் பெயரும் பண்புப் பெயரும் தொழிலாகு
பெயரும் ஆகலாம். முதனிலை ஒன்றேனும் ஈறு வேறுபடப்
பொருள் வேறுபடும்.
எ-டு:
நம்பு-நம்பிக்கை = உண்மையாகக் கொள்ளுதல்
(belief)
நம்பகம் (faith)
= விசுவாசம் (வ.)
நம்பு (முதனிலைத் தொ. பொ.) = நம்பாசை (hope)
"நம்பும் மேவும் நசையா கும்மே." (தொல்.உரி.31)
கல்-கற்றல் = கற்குஞ் செயல்
கற்கை = படிப்பு (learning)
கல்வி = நாட்டுப்படிப்பு முறை (education)
கலை = கல்வித்துறை அல்லது பயிற்சிக்கல்வி.
கற்பு = தனிக் காதலொழுக்கம்.
நட-நடத்தல் = நடக்குஞ் செயல்.
நடக்கை = நாட்டு வழக்கு, ஒழுகும் முறை.
நடத்தை = ஒழுக்கம்.
நடப்பு = நிகழ்காலத்தது (That
which is current)
நடை = மொழிப்போக்கு (style),
வாசலுக்கு அடுத்த உட்பக்கம் (threshold)
நடவை = வழி, மொழிவழங்குமிடம்.
நடவு = ஆட்சி
வினையாலனையும் பெயரீறுகள்
(1) வினைமுற்றீறுகள்
தன்மை ஒருமை: ஏன்
தன்மைப் பன்மை: ஏம், ஓம்
முன்னிலை ஒருமை:
ஆய்(ஈ-ஏ-ஐ-ஆய்)
முன்னிலைப்பன்மை: ஈம், ஈர்
ஈர், ஈங்கள், ஈர்கள் |
எ-டு:
"
"
"
|
வந்தேன்
வந்தேம்,வந்தோம்
வந்தாய்
வந்தீம், வந்தீர்
வந்தீங்கள், வந்தீர்கள் |
|