4. குறி | |
அ23 | a.1. எட்டு என்னும் எண்ணின் குறியாக 'அ' சுழியின்றி எழுதப்படுவது; symbol of the number eight, written without the loop. 2. ஐம்புள்ளுள் (பஞ்சபட்சியுள்) ஒன்றாய் வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து; letter representing the vulture one of the five astrologically important birds. a. மொழி முதல் எழுத்துகளுள் ஒன்று. எ-டு: அவன் |
|
|
|
அ24 |
வரலாறு | |
1. எழுத்து: | ஆ-அ. அகரம் ஆகாரத்தின் குறுக்கம். உயி ரொலிகளெல்லாம் பெரும்பாலும் இயற்கையாக நெடிலாகவே தோன்றிப் பின்பு குறுகின. இதன் விளக்கத்தை நெடுங் கணக்கு என்னும் உருப் படியிற் காண்க. அம் = அழகு. அம்-அ2. |
|
|
2. சொல்: |
அ2 = எழுத்துகட்கு முதலாகிய அகரம் போல் உலகங்கட்கு முதலாகிய இறைவன். |
| "அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு." | |
(குறள்.1) |
இறைவனைக் குறிஞ்சி நிலத்துச் சேயோன் வழிபாட்டினர் சிவன் என்றும் முல்லை நிலத்து மாயோன் வழிபாட்டினர் திருமால் என்றும், குறித்தனர். கி.மு. 1500-ஆம் ஆண்டுபோல் நாவலந் தேயத்திற்குட் புகுந்த சிறு தெய்வ வேள்விமத ஆரியர், சிவநெறியும் திருமால் நெறியும் ஆகிய இரு தூய தமிழ் மதங்களையும் ஆரியப்படுத்தற்கு முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கையைப் புகுத்தி, நான்முகன் (பிரமன்) என்னும் படைப்புத் தெய்வத்தைப் புதுவதாகப் படைத்து, அத் தெய்வத்தையும் அகரத்தாற் குறித்தனர். |
சுக்கு, திப்பிலி என்னும் மருத்துவச் சரக்குகள், ஏதேனுமொரு கரணியம் பற்றி அகரம் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம், அதைப் பிற்காலத்தார் 'அ' (அ2) என்று குறித்திருக்கலாம். |
(புறச்சுட்டு ஆ = அந்த. "ஆயீரியல" என்று (தொல். 17) செய்யுள் வழக்கிலும், ஆயாள் (மலையாளம்), ஆவூரு (தெலுங்கு) என்று உலக வழக்கிலும், ஆகாரம் சொல்லாகவே வழங்கிவருதல் காண்க. |
ஆ - அ3. |
3. சொல்லுறுப்பு |
| ஆ(அகச்சுட்டு)-அ4 . ஆ-ஆகு-ஆங்கு-அங்கு, ஆது-அது. அல் - அ5. ஓ.நோ. நல் - ந. |