(1) இருள் கவிந்த தமிழ் வானின் விடிவெள்ளி போன்றும், ஆரிய அடிமைத்தனத்தில் அயர்ந்துறங்கும் தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடும் அகவன் போன்றும், தனித்தமிழ் வேந்தர் மறைமலையடிகட்கு முன்சென்று கட்டியங்காரன் போன்றும் தோன்றியவர் சுந்தரனார். அவரையறியாது ஒரு சில வடசொற்கள் அவர் பாடலிற் புகுந்துவிட்டன. அது அவர் விரும்பிச் செய்ததன்று. இக்காலத்தில் அவர் இருந்தி ருப்பின், மேற்காட்டியவாறே பாடியிருப்பார் அல்லது திருத்தி யிருப்பார். |