| தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 23 |  
 
                                       |      தொடர்ந்தடித்துப்           போக்கிய தொலைவிலிருந்து, எதிர்க்கட்சியார் 'கத்திக் காவடி கவானக் காவடி' என்று           இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே           'கத்திக் காவடி யெடுத்தல்' என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற்           சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை           முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச்           செய்வர்.அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக்           காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனை யெனப்படும். |                                           முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்தபின்பும்           குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க                     வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்க்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே           அத் தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக் காவடித்            தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். |                            |      பாண்டிநாட்டில்           எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை. |                            |            II. கிட்டிப்புள்  |                            |      கிட்டிப்புள் என்பது           கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன : |                            |      பெயர் : கில்லி           என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும். |                                 முறை : கில்லித்தாண்டில்,           குச்சு குழியின் நீட்டுப் போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும்.           கிட்டிப் புள்ளிலோ, குச்சுக் குழியின்            குறுக்கே வைத்து அதற்கு நட்டுக் குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப்           பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை            எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின்,           கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே            அதை அடித்தல்வேண்டும். அசைவு |                        |             |   
				
 
				 | 
				 
			 
			 |