| அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக்கொண்டு           பிடித்தல் வேண்டும்; அல்லது, வலக் குடங்கையிலுள்ள நாற்கற்களையும் இவ்விரண்டாக           இரு தடவை சற்றே மேலெறிந்து, அவற்றைப் புறம்மேனோக்கிய இடக்குடங்கையால் உடனுடன்           பிடித்துக் கொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யின் பழமாம். |         
                  |      ஒருத்தி ஆடும்போது,           மேலெறிந்து பிடிக்குங் கல் தவறினாலும், கீழிருக்குங் கல்லை யெடுக்கும்போது பிற கல்லைத்           தொட்டுவிட்டாலும், அவள் நின்றுவிடவேண்டும். அதன்பின் அடுத்தவள் ஆடுவாள். ஒருத்தி           ஒரே ஆட்டையில் மறுமுறை அல்லது வழிமுறை ஆடும்போது, முன்பு விட்டதிலிருந்து ஆடுவாள்.           இவை எல்லாவகைக்கும் பொதுவாம். |         
                  |      ஆட்டை முடிந்தபின்,           வென்றவள் தோற்றவளின் கைகட் கிடையில் ஒரு கல்லை வைத்து, மேற்கைமேல் மூன்று           தடவை குத்துவது வழக்கம். இது எல்லா வகைக்கும் பொது. |         
                  |      ஆட்டின் பயன் : கையும்           கைநரம்பும் இந்த ஆட்டால் உரம்பெறும். இதுவும் பொதுவரம். |         
                  |            ஐந்தாங்கல் (மற்றொரு வகை)  |         
                  |      நாலாங் கொட்டைக்குப்பின்,           ஐங்கல்லையுங் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்னதிற்போல் நான்கு தடவை மேலே போட்டுப்           போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கல்லை ஒவ்வொன்றாய் இடப்பக்கமாகச்           சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். |         
                  |      பின்பு, மறுபடியும்           எல்லாவற்றையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போற் பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட           ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுள் நீங்கியிருப்ப வற்றை ஒவ்வொன்றாக           நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்ப வற்றையெல்லாம் ஒருங்கே வாரிப்           பிடித்தல் வேண்டும். |         
                  |      அதன்பின் இரு பாதங்களையும்           கூட்டிவைத்து, அவற்றின் மேல் மூலைக்கொன்றாக நான்மூலைக்கும் நாலு கல்வைத்து,           ஏனையொன்றை நான்குதடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு |