தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 97 |
2. பாண்டி | (1) பாண்டிநாட்டு முறை | ஆட்டின் பெயர் : பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற் கீறப் பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, பாண்டி எனப்படும். | இவ் விளையாட்டு, ஏனையிரு தமிழ்நாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறிகருவிப் பெயராய் இருக்கலாம். | பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப் பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பது போல், பாண்டி என்பதும் கொண் டிருக்கலாம். | பாண்டி விளையாட்டிற்கு வட்டு அல்லது வட்டாட்டு என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப் பெயரே வழங்குகின்றது. | ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகைகட்கும் ஒக்கும். | | |
|
|