பக்கம் எண் :

148தமிழர் வரலாறு-2

கணியர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை,தலைமையாசிரியர் சாமி வேலாயுதம் பிள்ளையொடுகூடிக் கலைச்சொற்கள் ஆக்குவித்தும்,பின்னர் ஆட்சிச்சொல் அகரவரிசைதொகுப்பித்தும், தமிழாட்சி நடைபெறத்தக்கதொண்டு செய்தவராவர்.

இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அவர்மகனார் வரகுண பாண்டியன், மதுரைப்பொன்னுச்சாமிப் பிள்ளை முதலியோர், இசைத்தமிழாராய்ச்சியால் தமிழிசையின் பெருமையையும்முதன்மையையும் நாட்டியவராவர்.

நடிப்புத்துறைத் தொண்டர்

இன்னிசை நடிகர் தியாகராசப் பாடகரும்நகைச்சுவை நடிகர் (N.S.)கிருட்டிணனும், நடிப்புத் துறையில் தமிழன்பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும்காத்தவராவர்.


தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

1925-ற்கும் 1950-ற்கும் இடைப்பட்டகாலத்தில், தமிழ்நாட்டிற் கல்லூரிமுதல்வராயிருந்த தமிழர் அனைவருள்ளும், வயிறுவளர்க் காது தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர்அ. இராமசாமிக் கவுண்டர். கணிதப் பேராசிரியராயிருந்தும் பெருங் கல்லூரிக்குச் சென்றுபெருஞ்சம்பளம் பெறாது சேலத்திலேயேநிலைத்திருந்து, பண்பட்ட தமிழரையே பாடத்துறைத்தலைமையாசிரியராக அமர்த்தியும், பிறகல்லூரிகளில் இடம்பெறாத ஏழை மாணவர்க்கெல்லாம் இடந் தந்தும், திருக்குறட் கழகம் நிறுவிவகுப்பு நடத்தியும், திருக்குறட்கு உரை வரைந்தும்,பெரியார்க்குத் துணை நின்றும், கல்லூரிகளிலும்மன்றங்களிலும் சொற்பொழிவாற்றியும்,சாத்திரியார் கலைச்சொற் குழுவிலிருந்துபணிபுரிந்தும், எனக்கு வேண்டிய ஏந்துகளை யெல்லாஞ்செய்து என் மொழி யாராய்ச்சியை முற்றுவித்தும்,தம் துணையாசிரியர் சிலரைப் பிற கல்லூரிமுதல்வராக்கியும், விருந்தோம்பி வேளாண்மைசெய்து இறுதிவரை தமிழ் வாழ்வு வாழ்ந்தும், இறவாப்புகழ் பெற்றவர் சேலம் நகராட்சிக் கல்லூரிமுதல்வர் இராமசாமிக் கவுண்டர்.

தமிழரை முன்னேற்றிய நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை

இரண்டாந்தரமாயிருந்த சேலம்நகராட்சிக் கல்லூரியை முதற்றரமாக்கியும்,ஆரியத்தை யெதிர்த்தும், இராமசாமிக் கவுண்டரையூக்கியும், மறைமலையடிகளைப் போற்றியும்,தமிழிசை மன்றம் நிறுவியும், தமிழையும்தமிழரையும் முன்னேற்றியவர், சேலம்