பக்கம் எண் :

154தமிழர் வரலாறு-2

ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
மண்ணாள் செல்வ மெய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே" 

(புறம்.47)

என்று பாடி, அப் புலவனைஉய்யக்கொண்டார்.

மூன்றாங் குலோத்துங்கச் சோழன்முரண்பட்ட போது,

"மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை யோதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு"

என்று கம்பர் பாடிப் பிரிந்தார்.எல்லா நாட்டிலும் புலவர் இப்படித் தானிருப்பர். அது"மண்டைக் கனம்" அன்று. புலவர் வறுமையைப்பயன்படுத்தி அவரை யடக்கியாளத் துணிவதுதான்செல்வனின் அல்லது அமைச்சனின் மண்டைக் கனம்.சில வணிகர் புலவர் வணங்கிப் பணிவது போல்எல்லாரும் பணியார்.


முத்தமிழ்க் காவலர்

இன்று தமிழைக் காத்து வருபவர் மூவரே.

(1) தவத்திருக் குன்றக்குடி யடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும்,கட்டாய இந்திக் கல்வியைக் கண்டித்தும்,தமிழ்நாடு முழுதும் இடைவிடாது அல்லும் பகலும் இனியதமிழிற் சொற்பொழிவாற்றியும், ஆண்டுதோறும்பறம்புமலையிற் பாரிவிழா நடாத்திப் பாரிபுகழைப் பரப்பிப் பல் புலவர்க்குச் சிறப்புச்செய்தும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாடுநடைபெறச் செய்தும், தமிழ்க் காப்பு நூல்வெளியீட்டிற்குப் பொருளுதவியும், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்புப்பணியில் ஈடுபடுமாறு தமிழக அரசைத் தூண்டியும்,தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றிவருபவர், தமிழ்நாட்டுத் திருமடத் தலைவர்அனைவருள்ளும் தலைசிறந்த தவத்திருக் குன்றக்குடிஅடிகள் ஆவர்.

(2) தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை

நீண்ட காலமாகக் கிடைக்காத நூல்கள்நேர்மையான விலைக்குக் கிடைக்குமாறும், விளங்காதசெய்யுட் பனுவல்கள் எளிதாக விளங்குமாறும்,ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களின்மூலத்தையும் உரையையும் ஆங்கிலமொழிபெயர்ப்பையும், திண்ணிய வெண்டாளில்முத்துப்போன்ற எழுத்திற் செவ்வையாக அச்சிட்டு,கண்கவர் கவின் கட்டடங் கட்டி, உலக முழுதும்பரப்பித்