பக்கம் எண் :

168தமிழர் வரலாறு-2

பின்னிணைப்பு

1. உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள்

திருத் தனிநாயகம் தோற்றுவித்தஉலகத் தமிழ்ப் பேரவைச் சார்பாக, இதுவரைநடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள்மூன்றாலும், தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்பரவிவிட்டதாகப் பல பேராசிரியரும்கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆரியத்தால்அடைந்த பேதைமை இன்னுந் தமிழருள்ளத்தினின்றுநீங்கவில்லை என்பதற்கு, இது ஒரு சான்றாம்.தமிழனை ஆரியனும் ஏமாற்றுகின்றான், திரவிடனும்ஏமாற்றுகின்றான், தமிழனும் ஏமாற்றுகின்றான்.

பர்.தெ.பொ.மீ.யின் மாணவரென்றுதம்மைச் சொல்லிக் கொள்ளும் திருத்தனிநாயகம், தமிழ் வளர்ச்சிக்கென்று உலகத்தமிழ்ப் பேரவையைத் தோற்றுவித்ததாகத்தெரியவில்லை. அண்ணாமலை நகரில் அவர் என்னைப்பார்க்க வந்திருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியிலுள்ள குற்றங் குறைகளையெல்லாம் எடுத்துக் காட்டினேன். அதற்கு அவர் ஒருவிடையுஞ் சொல்லாது சென்றுவிட்டார். அதனால்,அவருக்குத் தமிழ்ப்பற் றில்லையென்றும், என்தமிழ்த் தொண்டிற்குப் பயன்பட மாட்டாரென்றும்கண்டுகொண்டேன். அவரும், தாம் அமைக்கும்குழுக்களில் என்னைச் சேர்க்கக்கூடா தென்றும்,சேர்ப்பின் அவர் வேணவா நிறைவேறாதென்றும்துணிந்துவிட்டார்.

மறைமலையடிகளும் நானும், வயிறுவளர்க்கவோ பொருளீட் டவோ தமிழும் பிறவும்கற்காது, தமிழை வடமொழிப் பிணிப் பினின்றுமீட்கவே பலவும் கற்றாய்ந்தேம். ஆயினும், திருத்தனிநாயகம் நடத்திய உலகத் தமிழ்க்கருத்தரங்குகள் மூன்றிற்கும் எனக்குவெற்றழைப்பும் இல்லை. அவ் வரங்குகளிற்கலந்துகொண்ட தமிழ்ப் பேராசிரியருள் ஒருவரும்இதுபற்றி வினவவுமில்லை.

முதற் கருத்தரங்கு, முறைப்படிதமிழ்நாட்டில் நடைபெறாது, அயல்நாடான மலையாவில்நடைபெற்றது. கட்சித் தலைவர் பலர் சுற்றுலாச்செல்வதுபோற் குடும்பத்துடனும் அங்குச் சென்றனர்.

இரண்டாம் கருத்தரங்கு சென்னையில்நடைபெற்றது. தமிழன்பர் பலர் என்னைப்பற்றித்திரு. அண்ணாதுரையார்க்கு எழுதினதனால், அவர் தம்ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, 'தமிழ்த்தாள்கள்' (Tamil Papers)என்னும் கடைப்பட்ட 8ஆம் கட்டுரைக்